மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி!

சிறிலங்காவில்  ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையைத் தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீல.சு.க. வின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியனவே இவ்வாறு புதிய கூட்டணியில் ஒன்றிணையவுள்ளன.

குறித்த புதிய கூட்டணியானது இடம்பெறப்போகும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றித்துச் செயற்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்  மேலும் தெரிவித்துள்ளார்.