இராஜதந்திரிகளை சந்திக்கின்றார் மகிந்த!

மகிந்த ராஜபக்ச இன்று கொழும்பில் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கவுள்ளார். சிறிலங்காவில்   ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை தொடர்ந்து  தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வெளிநாட்டு இராஜதந்திரிகளை  சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதன் பின்னர் மகிந்த ராஜபக்ச  வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்

சிறிலங்காவில் அரசியல் சூழ்நிலை தொடர்பில்  இராஜதந்திரிகள் மத்தியில் கடும் விசனம் காணப்படும் நிலையில் இந்த சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறிலங்கா  நாடாளுமன்றத்தில்  இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து  இராஜதந்திர வட்டாரங்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.