நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத்துடன் நாட்டின் செயற்பாடுகளை தொடந்தும் முன்னெடுக்க முடியாது என ஜனாதிபதி கருதுவாராக இருந்தால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் என தெரிவித்த  ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ , 19 அரசியலமைப்பில் எந்தவொரு இடத்திலும் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்பட வில்லை எனவும்  தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.