நாடாராளுமன்றத்தை கூட்ட சபாநாயகர் விசேட திட்டம்!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக  நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு இணங்காவிட்டால் சபாநாயகர் கருஜெயசூரிய விசேட சூழ்நிலை என்ற அடிப்படையில் பாராளுமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பார் என தகவல்கள் வெளியாகின்றன.

இது குறித்த இறுதி முடிவையெடுப்பதற்கு முன்னதாக இன்று சபாநாயகர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்.

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதிக்கு இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பியுள்ள நிலையிலேயே இன்றைய சந்தி;ப்பு இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதிக்கான இரண்டாவது கடிதத்தில் 125 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டவேண்டும் என  தெரிவிக்கின்றனர் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் என்ற அடிப்படையில் நான் அதனை செவிமடுக்கவேண்டும் என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அரசியல்கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னரே இரண்டாவது கடிதத்தை சபாநாயகர் அனுப்பிவைத்துள்ளார்.