யுத்த குற்றவாளியை மீண்டும் ஆட்சியிலமர்த்தியுள்ளார் மைத்திரி!

யுத்த குற்றவாளியை மீண்டும் ஆட்சியிலமர்த்தியுள்ளார் இலங்கை ஜனாதிபதி  சிறிசேன என  அமெரிக்காவின் ஐக்கியநாடுகளிற்கான முன்னாள் தூதுவர் சமந்தா பவர் தெரிவித்துள்ளார்

தனது டுவிட்டர் செய்தியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி சிறிசேனவின் நடவடிக்கையால் இலங்கையில் ஜனநாயகம் புரட்டிப்போடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாக வாக்குறுதியளித்த சிறிசேன தற்போது யுத்த குற்றம்,காணாமல்போதல் போன்றவற்றிற்கு காரணமான மகிந்த ராஜபக்சவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்துள்ளார்.

அவசர இராஜதந்திர நடவடிக்கைகள் அவசியம் என தெரிவித்துள்ள சமந்தா பவர் இலங்கையர்களும் இந்த  விவகாரத்தை கையிலெடுக்கவேண்டும், பெருமளவு இரத்தம் சிந்தப்பட்டுள்ளதால் பின்னோக்கி செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்