தொலைபேசியில் ஆபாச காட்சிகளை தொடர்ந்து பார்த்து வரும் இரண்டு சிறுவர்கள் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த விவகாரத்தில் தொடர்புடைய சிறார்கள் இருவரும் 10 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க முடியாது இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அவுஸ்திரேலியாவின் சைபர்-பாதுகாப்பு நிபுணரான Susan McLean இந்த விவகாரம் தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாருடன் பேசியுள்ளார்.
ஆனால் கடந்த ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகம் ஏன் காவல் முறையிடம் அப்போது முறைப்பாடு அளிக்கவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு தமது மகளுக்கு ஏற்பட்ட கொடுமையை அந்த பாடசாலை மூடி மறைத்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த சம்பவத்தை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி அந்த பாடசாலையில் இருந்து விலகிக்கொண்டாலும், தாக்குதலில் ஈடுபட்ட சிறுவர்கள் இருவரும் தொடர்ந்து பாடசாலைக்கு சென்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான சிறுவர்கள் இரண்டு பேரும் தங்கள் தொலைபேசிகளில் ஆபாசப்படங்களை சேமித்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது.