அவுஸ்திரேலியாவில் வெடி விபத்து: 4 இலங்கையர்கள் படுகாயம்!

அவுஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் இடம்பெற்ற வெடி விபத்தில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உணவம் ஒன்றில் இடம்பெறவிருந்த நிகழ்வொன்றிற்காக உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு இலங்கையர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த உணவகத்திலிருந்த எரிவாயு கொள்கலன் ஒன்று வெடித்தமை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கான்பராவிலுள்ள உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.