மைத்திரி கொலை சதி சந்தேக நபரிடம் இன்றைய தினம் விசாரணை!

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கொலை சதி விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியப் பிரஜையான மேர்சலி தோமஸ் பயங்கர வாத தடைச் சடத்தின் கீழ் இன்றைய தினம் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளார்.

கொலைச் சதி விவ­காரம் குறித்து பணி இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்ள பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் நாலக சில்­வா­விடம் நேற்று மூன்­றா­வது நாளாக 10 மணி நேர விசா­ரணை நடத்­தப்­பட்­டது.

கடந்த வாரத்தின் வியா­ழ­னன்று 9 மணி நேரமும், வெள்­ளி­யன்று 10 மணி நேர­மு­மாக 19 மணி நேரம் இது குறித்து விசா­ரிக்­கப்­பட்­டுள்ள நாலக டி சில்­வா­விடம் நேற்று காலை 9.15 முதல் இரவு 7.15 வரை விஷேட விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன.

நேற்றும் அவ­ரிடம் விசா­ர­ணை­களை முழுமைப் படுத்த முடி­யாமல் போன­தாக கூறிய காவல்துறை பேச்­சாளர் காவல்துறை அத்­தி­யட்சர் ருவன் குண­செ­கர, இன்­னு­மொரு நாள் எஞ்­சிய விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க அவரை அழைப்­பது என விசா­ர­ணை­யா­ளர்கள் தீர்மானித்துள்ளார்.

இத­னி­டையே இன்­றைய தினம் இந்த கொலை சதி விவ­கா­ரத்தில், சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­திய பிர­ஜை­யான மேர்­சலி தோமஸ் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தடுத்து வைத்து விசா­ரிக்­கப்­படும் நிலையில், அவர் கோட்டை நீதிமன்றில் ஆஜர்ச் செய்யப்படவுள்ளார்.

கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய இவ்வாறு அவர் ஆஜர்ச் செய்யப்படவுள்ள நிலையில், இடம்பெறும் விஷேட விசாரணைகளின் தற்போதைய நிலைமை தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.