தன் குழந்தையைக் காப்பாற்ற போராடிய அவுஸ்திரேலிய தாய்!

ஆலங்கட்டி மழையில் தன் குழந்தையைக் காப்பாற்ற தாய் ஒருவர் தனது உயிரைப் பணயம் வைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லேண்ட் மாகாணம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான புயல் தாக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் பல மாகாணங்களில் புயல் தாக்கியது.

அத்தோடு பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. மணிக்கு 144 கிமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசியுள்ளது.

குயின்ஸ்லேண்ட் மாகாணத்தைச் சேர்ந்த ஃபியோனா சிம்ப்சன் என்பவர் புயலின்போது தன் குழந்தையுடன் காரில் வெளியே சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக ஆலங்கட்டி மழையால் கார் கண்ணாடி உடைந்து குழந்தையுடன் சிம்ப்சன் மாட்டிக்கொண்டுள்ளார்.

தனது நம்பிக்கையைக் கைவிடாது குழந்தையைக் காப்பாற்றியுள்ளார். ஆலங்கட்டி மழையால் அவரது முதுகுப் பகுதி, முகம் என உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டது.

சிறிது நேரத்துக்குப் பின்பு வீட்டுக்கு வந்த அவர், சமூக வலைதளங்களில் இது குறித்துப் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில் இன்று ஒரு நல்ல பாடம் கற்றுக்கொண்டுள்ளேன். இனி புயல் சமயங்களில் வெளியே செல்ல மாட்டேன்.

இனிமேல் அனைவரும் புயல் சமயங்களில் கவனமாக இருங்கள் எனக் கூறி காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் தனது உயிரைப் பற்றிக் கவலை கொள்ளாமல்குழந்தையைக் காப்பாற்றிய தாய்க்கு பலரும் பாராட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.