கடற்கரையில் கண்டெடுத்த காதல் கடிதம் கண்ணீரால் நனைந்தது!

கடற்கரையில் கண்டெடுத்த காதல் கடிதத்தைப் பற்றிய விடயத்தை அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த Daniel McNally மற்றும் அவரது மனைவி Kate Challenger உடன் இணைந்து கடந்த ஓகஸ்டு 7 ஆம் திகதியன்று கடற்கரை பகுதியில் நடந்து சென்றுள்ளார்.

அப்போது கடலில் ஒரு பாட்டில் மிதந்தது வருவதை அவதானித்த குறித்த காதல்ஜோடி அதனை எடுத்துப் பார்த்த போது உள்ளுக்குள் காதல் கடிதம் ஒன்று இருந்துள்ளது. அதனை எடுத்து பிரித்து பார்த்துள்ளனர்.

அந்த கடிதத்தில் சீன மொழியில் எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்ததால், என்னவென்று தெரியாமல் தங்களுடைய முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அதில் உள்ள எழுத்துக்களை மொழி பெயர்த்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். அதன்படி உள்ளூரில் பணிபுரியும் ஒருவர் அதனை மொழிபெயர்த்து கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில், “நான் இப்போது இந்தியப் பெருங்கடலில் பயணம் செய்கிற ஒரு மாலுமியாக இருக்கிறேன். வீட்டில் இருக்கும் என் வருங்கால மனைவியை நினைத்து வாடுகிறேன்..

எங்கள் நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு கொஞ்ச நாட்களுக்குள் கடலில் தூரமாக பயணம் செய்கிறேன். அவளை விட்டு வெளியேறியதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.

என் மனதில் உள்ள ஆழ்ந்த உணர்ச்சிகளை அவளிடம் கொடுத்துவிட்டு ஒரு மிதக்கும் பாட்டில் அதை மூடுகிறேன்.

என் ஒரே ஆசை வீட்டிற்கு திரும்பி ஜிங்ஸுடன் ஒரு அழகான, மகிழ்ச்சியான வாழ்க்கையினை நீண்ட நாட்கள் வாழ வேண்டும்.

இந்த பாட்டில் ஆழமான கடல்களில் மிதக்கும் என்று எனக்குத் தெரியும். அதை யாரேனும் கண்டுபிடித்து படிக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. என் சொந்த இதயத்தை ஆறுதலடைய செய்ய மட்டுமே செய்கிறேன்.

நான் உன்னை காதலிக்கிறேன் ஜிங் என அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

இக் கடிதத்தைப் படித்த குறித்த காதல் ஜோடி அந்த தம்பதியினர் உடனடியாக அந்த நபரை தேடி கண்டுபிடிக்க முடிவு செய்து அக் கடிதத்தை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சீன ஊடகங்களிலும் இந்த கடிதம் செய்தியாக வெளியாக ஆரம்பித்தது. இதனை பார்த்து ஒரு சீன நபர் ‘இது என்னுடைய நண்பன் எழுதிய கடிதம் தான் எனக் கூறியுள்ளார்.

அவர்கள் இருவரையும் பார்க்க வேண்டும் என Kate கூறியுள்ளார். அதற்கு அந்த நபர் தற்போது அது முடியாது. அதில் இருக்கும் என் நண்பனின் காதலிக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் முடிந்துவிட்டது.

அவருக்கு என்று ஒரு கணவன் குழந்தைகள் என குடும்பம் உள்ளது. தற்போது சென்று அவரை பார்த்தால் அவருடைய குடும்ப வாழ்க்கை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

புனிதமான காதல் கதை சோகத்தில் முடிந்துள்ளது.