விபத்தில் கார்பிணி பெண் மரணம்! கணவர் கோமா நிலையில்!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது கணவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

கேத்ரீன் (வயது 23) என்ற பெண்ணுக்கும் பிரான்சோ (வயது 25) என்ற இளைஞருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்த நிலையில் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து கேத்ரீன் கர்ப்பமாக இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு கேத்ரீனும், பிரான்சோவும் சிட்னியில் உள்ள Orchard Hills பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது காரை பெண் ஓட்டுனர் ஓட்டினார்.

அப்போது எதிரில் வந்த கார் ஒன்று இவர்கள் பயணித்த காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது..

இந்த விபத்தில் கர்ப்பிணியான கேத்ரீன் அவர் வயிற்றில் இருந்த குழந்தைகள் மற்றும் பெண் ஓட்டுனர் உயிரிழந்தனர்.

கேத்ரீன் கணவர் பிரான்சோவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் கோமா நிலையில் உள்ளார்.

எதிரில் வந்த காரை ஓட்டிய நபரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

இச்சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.