பிரசவத்தை நேரலை செய்யப்போவதாக அறிவித்த அவுஸ்திரேலிய தாய்!

அவுஸ்திரேலியாவில் தாய் ஒருவர் தனது 4 வது பிரசவத்தை நேரலையாக இன்ஸ்டாகிராமில் ஒளிபரப்புவேன் எனத் தெரிவித்துள்ளார்

விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த Jessica Hood (வயது 30) என்ற பெண்ணுக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர்.

தற்போது 4வது குழந்தையை பெற்றெடுக்கவுள்ளார். இக்குழந்தைக்குப் பின் வேறு எந்தக் குழந்தையையும் பெற்றுக் கொள்ளப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் மூன்று ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராமில் கணக்கு ஒன்றை ஆரம்பித்துள்ளார். தான் சந்தித்த மனநல பிரச்சனைகள் மற்றும் தனது பதிவுகள் என்று பதிவிட்டு வந்துள்ளார்.

இவரை மூன்று ஆண்டுகளில் 14 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பின் தொடர்கின்றனர்.

 

இதுகுறித்து தனியார் இணையதளம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில்;

எனது 4வது பிரசவத்தை இன்ஸ்டாகிராமில் நேரலையாக ஒளிபரப்பு செய்யவுள்ளேன். குழந்தை பிறக்கும் போது அனுபவிக்கும் துன்பம் வலி வேதனைகளை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஒளிபரப்பு செய்வேன்.

இது அனைவருக்கும் பிடிக்குமா என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு எனது நண்பர்கள், குடும்பத்தார் மற்றும் இன்ஸ்டாகிராமில் பின்பற்றுவோர்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.