யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டம்!

யாழில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக் குறித்து மூன்றம் கோரிக்கைகளை முன்வைத்து அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டவுள்ளது.

அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்று , அரசியல் கைதிகளை விடுதலை செய் , பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு ஆகிய மூன்று கோரிக்கைகளை முன் வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுப்பட்டுள்ளது.