சிட்னி விமான நிலையத்தில் நிறவெறியில் சிக்கிய ஷில்பா!

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழில் விஜய் நடித்த படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவர் இப்போது ஆஸ்தி ரேலி யா சென்றுள்ளார். அங்கு மெல்போர்ன் செல்வதற்காக சிட்னி விமான நிலையத்துக்கு வந்தார் விமான நிலையத்தில் பணிபுரியும் மெல் (Mel) என்கிற பெண் அதிகாரி, ஷில்பாவின் நிறத்தைக் கூறி தகாத வார்த்தைகளால் பேசினாராம். பின்னர், ஷில்பாவின் லக்கேஜ் குறிப்பிடப் பட்டுள்ள தை விட அதிக எடையுடன் இருப்பதாகக் கூறி தடுத்துள்ளார். இதனால் விமானத்தை தவறவிட்டதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி யுள்ளார்.

அதில் அவர் மேலும், குவாண்டஸ் விமானத்தில் செல்வதற்காக டிக்கெட் வாங்கியிருந்தேன். செக் இன் பகுதியில் மெல் என்கிற சிடுசிடுப்பான அதிகாரியை சந்தித்தேன். அவர் என் நிறத்தைப் பற்றி பேசினார். பின்னர் எனது லக்கேஜ் ஓவர் சைசாக இருப்பதாகக் கூறி அடுத்த கவுண்டருக்கு சென்று செக் பண்ண சொன்னார். சென்றேன். அங்கிருந்த அமைதியான பெண் அதிகாரி, ;இது சரியாகவே இருக்கிறது, வேண்டுமென்றால் அடுத்த கவுன்டரில் சென்று கையாலயே பரிசோதித்துக் கொள்ளலாம் என்றார். 5 நிமிடத்துக்குள் அந்த கவுன்டரை மூடிவிடுவார்கள் என்பதால் அதற்கான நேரம் இல்லை. அந்த மெல்-லிடம் சென்று மீண்டும் கோரிக்கை வைத்தேன். அவர் என் பேச்சை கேட்கவேவில்லை. இதையடுத்து ஓவர்சைஸ் பேக்கேஜ் கவுன்டருக்கு ஓடினேன். நடந்ததை சொன்னேன். என்னுடன் இருந்தவர்களும் அந்த கவுன்டரில் இருந்தவர்களிடம் சொ ன்னார்கள் என்று தெரிவித்துள்ளார்.

குவாண்டஸ் விமான நிறுவனம், அவர்களின் ஊழியர்களுக்கு, பயணிகளுக்கு உதவவதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.

மரியாதை இல்லாமல் கடுமையாக நடந்து கொள்வதை ஏற்க முடியாது. இந்த லக்கேஜ் (புகைப்படம்) ஓவர் சைசாகவா இருக்கிறது? என்றும் அவர் ;கேட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக உரிய அதிகாரிகளிடம் பேசி அந்த பெண் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.