மகிந்தவின் தெரிவு – இந்தியாவா? அல்லது சீனாவா?

முன்னாள் அரச தலை­வர்­என்ற மதிப்புடன் மகிந்­த­ரா­ஜ­பக்ச இந்­தி­யா­வுக்­குச் சென்று தலைமை அமைச்­சர் மோடி, முதன்மை எதிர்க்­கட்­சி­யான காங்­கி­ர­ஸின் முக்­கி­ யஸ்­தர்­கள் ஆகி­யோ­ரைச் சந்­தித்து உரை­யா­டி­யுள்­ளார். இலங்­கை­யின் இன்றை சூழ்­நி­லை­யில் மகிந்­த­வின் இந்­தி­யப் பய­ணம் முக்­கி ­யத்­து­வம் பெறு­கின்­றது.

சுமார் 10 ஆண்­டு­கா­லம் அரச தலை­வர் பத­வியை வகித்­த­வர் என்ற பெருமை மகிந்­த­வுக்கு உள்­ளது. அவர் மூன்­றா­வது தட­வை­யும் அந்­தப் பத­விக்­குப் போட்­டி­யிட்­டுத் தோல்­வி­யைத் தழு­வி­ய­போ­தி­லும் ஆட்­சிக்கு வரு­வ­தில் உள்ள ஆர்­வத்தை இன்­ன­மும் கொண்­டி­ருக்­கி­றார். இத­னால் புதிய கட்­சி­யொன்றை அமைத்­த­து­டன் வேறு சில­ரின் ஆத­ர­வை­யும் பெற்று அர­சுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றார்.

பதவி வகித்தபோது சீனாவுடனேயே அதிக உறவு கொண்டாடினார்

மகிந்த ராஜபக்ச பத­வி­யில் இருந்­த­போது இந்­தி­யா­வை­விட சீனா­வின் பக்­கமே சாய்ந்து காணப்­பட்­டார். தலை­ந­கர் கொழும்­பில் இருந்து வெகு தொலை­வில் அமைந்­துள்ள தமது சொந்த மாவட்­டத்­தில் துறை­ மு­கம் ஒன்­றை­யும் சீன­நாட்­டின் நிதி உத­வி­யு­டன் அமைத்­தார்.

அதை­விட நாட்­டின் பல்­வேறு அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளில் சீனா ஈடு­பட்­டது. ஏரா­ள­மான சீனத் தொழி­லா­ளர்­கள் வர­வ­ழைக்­கப்­பட்டுப் பணி­க­ளில் அமர்த்­தப்­பட்­ட­னர். இதை­விடக் கொழும்புத் துறை­முக நக­ரின் நிர்­மா­ணப் பணி­க­ளும் சீனா­வி­டமே வழங்­கப்­பட்­டன. எல்­லா­வற்­றுக்­கும் மேலா­கப் பெரிய தொகை­யி­லான கடன்­க­ளை­யும் சீனா வழங்­கி­யது.

தற்­போது அம்­பாந்­தோட்டை துறை­மு­கம் 99 ஆண்­டு­க­ளுக்குக் குத்­தகை அடிப்­ப­டை­யில் சீனா­வி­டமே வழங்­கப்­பட்­டுள்­ளது.

சீனாவின் ஆதிக்கத்தை  இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது

தனது அண்டை நாடான இலங்­கை­யில் சீனா ஆதிக்­கம் செலுத்­து­வதை இந்­தி­யா­வி­னால் ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சீனா அதன் பரம எதிரி என்­ப­தால் இலங்­கை­யில் சீனா ஊடு­ரு­வு­வது தனது தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாகி விடு­மென்­ப­தும் இந்­தி­யா­வுக்கு நன்கு தெரி­யும்.

இந்த நிலை­யில்­தான் தமி­ழர் விரோ­தப் போக்கை கடைப்­பி­டிக்­கும் தமி­ழர்­க­ளின் பெயர் தாங்­கிய சுப்­ப­ர­ம­ணி­யன் சுவாமி தி।டீ­ரென இலங்­கைக்கு வந்­தார். அம்­பாந்­தோட்­டை­யில் அமைந்­துள்ள மகிந்­த­வின் இல்­லத்­துக்­குச் சென்று அவ­ரைச் சந்­தித்­தார். சுவாமி இந்­தி­யா­வின் ஆளும் கட்­சி­யைச் சேர்ந்­த­வர் என்­ப­தால் அவ­ரது வரு­கை­யில் அப்­போதே சந்­தே­கம் நில­வி­யது. இப்­போது அது நிவர்த்­தி­யா­கி­விட்­டது.

மகிந்த இந்­தி­யா­வுக்­குச் சென்­ற­தும், மோடி உள்­ளிட்ட முக்­கிய தலை­வர்­க­ளைச் சந்­தித்­த­தும் சீனா­வுக்கு உவப்­பான விட­யங்­க­ளாக இருக்­கப்­போ­வா­தில்லை. மகிந்த அடுத்த தட­வை­யும் ஆட்­சி­யைக் கைப்­பற்­ற­வேண்­டும் என்­ப­தும்­சீ­னா­வின் விருப்­ப­மா­கும்.

கடந்த தடவை சீனா பல வழி­க­ளி­லும் பெரு­மு­யற்சி செய்த­போ­தி­லு­ம் மகிந்­த­வால் வெற்­றி­யீட்ட முடி­ய­வில்லை. இது­வும் சீனா­வுக்கு ஏமாற்­றத்­தையே கொடுத்­தது.

மகிந்தவின் தோல்விக்கு இந்தியாவும் காரணம்

மகிந்­த­வின் தோல்­விக்கு இந்­தி­யா­வும், அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­க­ளும் கார­ண­மாக இருந்­த­தா­கக் கூறப்­பட்­டது. மகிந்­த­வின் சீனச் சார்ப்­புக் கொள்­கையே அந்த நாடு­க­ளின் வெறுப்­புக்­கான கார­ண­மா­கும். தற்­போது அமெ­ரிக்கா தனது முக்­கிய எதி­ரி­யா­கச் சீனா­வைக் கருதி வரு­கின்­றது. பொரு­ளா­தார ரீதி­யா­க­வும், படை பலத்­தா­லும் சீனா அமெ­ரிக்­கா­வுக்­குப் போட்­டி­யாக வளர்ந்து வரு­வதே இதற்­கான கார­ண­மா­கும்.

மகிந்­த­வின் நட­வ­டிக்­கை­கள் அடுத்த தடவை அவரே ஆட்­சியை அமைப்­பா­ரென்ற நம்­பிக்­கையை இந்­தி­யா­வி­டம் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கக்­கூ­டும். இத­னால் சுப்­பி­ர­ம­ணின் சுவாமி ஊடாக மகிந்­த­வுக்கு அழைப்பு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்­க­லா­மென நம்­பப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, மோடி­யும்,மகிந்­த­வும் சந்­தித்­துள்­ளமை இலங்­கை­யில் மிகப்­பெ­ரிய அர­சி­யல் மாற்­றத்­துக்­கான அறி­கு­றி­யென மகிந்­த­வின் ஆத­ர­வா­ளர்­கள் தெரி­வித்­துள்­ள­னர். இதில் எந்த அள­வுக்கு உண்மை பொதிந்­தி­ருக்­கி­றது என்­பது தெரி­ய­வில்லை.

மகிந்தவின் இந்திய உரை

மகிந்த ராஜ­பக்ச இந்­தி­யா­வில் வைத்து வழங்­கிய செவ்­வி­யில் தமிழ் மக்­க­ளில் ஒரு­வ­ருக்­குக்­கூடப் பாதிக்கு ஏற்­ப­டாத வகை­யில் இறு­திப் போரை முன்­னெ­டுத்­துச் செல்­லு­மாறு தாம் படை­யி­ன­ருக்கு உத்­த­ரவு பிறப்­பித்­த­தா­க­வும், பொது மக்­களைப் படை­யி­னர் கொல்­ல­வில்­லை­யெ­ன­வும், புலி­களே தமது மக்­க­ளைக் கொலை செய்­த­தா­க­வும் கூறி­யுள்­ளார்.

ஆனால் பன்­னாடுகளின் ஆத­ர­வு­ட­ன் விசா­ர­ணை­கள் இடம்­பெ­று­மா­னால் அப்­பாவி மக்­கள் பல ஆயி­ரக்­க­ணக்­கில் கொல்­லப்­பட்­ட­மைக்குக் கார­ணம் என்­பது தெரி­வ­ரும். இறு­திப் போரில் இந்­தி­யா­வின் பங்­கும் நிறை­யவே இருந்­த­தால் நீதி­யான போர்க்­குற்ற விசா­ர­ணை­கள் இடம்­பெ­றும்­போது இந்­தி­யா­வின் பக்­க­மும் விரல்­கள் நீட்­டப்­ப­டு­வ­ தற்­கான வாய்ப்பு அதி­க­முள்­ளது.

இதி­லி­ருந்து தப்­பிக்­கவே அந்த நாடு விரும்­பும் என்­ப­தில் சந்­தே­க­மில்லை. தமி­ழர்­கள் தொடர்­பா­கச் சிறி­தும் அக்­க­றை­யில்­லாத மகிந்­த­வும், இந்­தி­யா­வும் ஒன்­றி­ணை­வ­தைத் தமி­ழர்­கள் சந்­தே­கக் கண்­கொண்டு பார்க்­கின்­ற­னர். இதே­வேளை மகிந்த இந்­தி­யா­வின் பக்­கம் சாய்­வதை சீனா ஒரு­போ­துமே ஏற்­றுக்­கொள்ள மாட்­டாது.

ஏனென்­றால் தனது நெருங்­கிய சகா­வான மகிந்த இலங்­கை­யில் அடுத்து ஆட்­சியை அமைப்­பா­ரென அது எதிர்பார்த்திருக்கும் நிலை­யில் அவரை இழப்­ப­தற்கு சீனா ஒரு­போ­துமே விரும்­பாது. இத­னால் அடுத்து மகிந்­தவை வளைத்­துப் போடு­வ­தற்­கான முயற்­சி­யில் அந்த நாடும் இந்­தியா போன்று ஈடு­ப­டு­மென எதிர்­பார்க்க முடி­யும். அதேபோலவே தமக்கு எந்­தப் பக்­கத்­தி­லி­ருந்து அதிக இலா­பம் கிடைக்­கி ­றதோ அதைத்­தான் மகிந்த தெரிவு செய்­வா­ரென்பதையும் எதிர்­பார்க்க முடி­யும்.

நன்றி – உதயன்