வெலிக்கடை மோதல் தொடர்பில் கைதானவர்களின் விளக்கமறியல் நீடிப்பு!

வெலிக்கடை சிறைச்சாலை மோதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட காவல் துறை  போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் நியோமல் ரங்கஜீவ மற்றும் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரன்ஜன் லமாஹேவா ஆகியோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் இன்றைய தினம்  கொழும்பு மேலதிக நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தையடுத்து 27 கைதிகள் பலியாகினர்.

இதையடுத்தே குறித்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் முன்னாள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் காவல் துறை  போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ ஆகியோர் கைதுசெய்யப்பட்டு  விளக்கமறியலில் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.