பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் இடமாற்றம்!

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவை தற்காலிகமாக தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த இடமாற்றமானது காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் உத்திரவுக்கமைவாகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ருவான் குணசேகர மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஷபக்ஷவை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியதாக நாலக சில்வாவின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

கடந்த 12 ஆம் திகதி கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, இந்த குற்றச் சாட்டினை நாமல் குமார முன்வைத்தமை குறிப்பிடத்தக்கது.