ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகள்!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படுகின்ற ஆட்கடத்தல்களை தடுப்பதற்கு, அவுஸ்திரேலிய அரசாங்கம் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதற்காக விமான நிலையங்களிலும், விமானங்களிலும் ஆட்கடத்தல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆட்கடத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றவர்களை அடையாளம் கண்டு தடுக்கும் வகையிலான வேலைத்திட்டம் தற்போது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் சிறிலங்கன் விமான சேவையில் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

அதற்கான பயிற்சியளிப்புகளும் விமான சேவையாளர்களுக்கு அவுஸ்திரேலியாவினால் வழங்கப்பட்டு வருகிறது.