படகில் அவுஸ்திரேலியா சென்ற 88 பேர் சர்வதேச கடலில் வைத்து கைது.!

படகில் அவுஸ்திரேலியா சென்ற 88 பேர் சர்வதேச கடலில் வைத்து செய்யப்பட்டுள்ளனர்.

மாலைதீவில் இருந்து படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக சென்ற இலங்கையைச் சேர்ந்த 88 பேர் சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு ரங்கல கடற்படை முகாமிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை பகல் அழைத்து வரப்பட்டுள்ளதாக காவல் துறை  உயர் அதிகரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து விமானமூலம் மாலைதீவிற்கு சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் கடலில் சென்ற இவர்களை  திங்கட்கிழமை அதிகாலை சர்வதேச கடற்பரப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது.