அவுஸ்திரேலியாவில் அறிமுகமாகும் புதிய விசா!

தெற்கு அவுஸ்திரேலியாவில் புதிய விசா ஒன்று அறிமுகம் செய்ய அரசு முனைப்புக் காட்டியுள்ளது. இந்தப் புதிய விசா ஒன்றை அறிமுகப்படுத்துவதற்காக 4 லட்சம் டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த விசாவில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில் முதலீடு செய்து வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட விரும்பும் புதிய தொழில்முனைவோரை வரவழைக்கும் நோக்கில் இப்புதிய விசா திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்துகிறது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள entrepreneurial and Business & Innovation விசாவிலிருந்து இது மாறுபட்டது என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விசாவுக்கான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு தெற்கு அவுஸ்திரேலியா வந்து வர்த்தக நடவடிக்கையை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் வெற்றிகரமாக தமது வர்த்தகத்தை நடைமுறைப்படுத்துபவர்கள் இங்கு நிரந்தரமாக வாழ்வதற்கு விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிகிறது.

இதேவேளை குறித்த புதிய விசாவுக்கு 45 வயதுக்கு குறைந்தவர்கள் மாத்திரமே விண்ணப்பிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது. அதபோன்று தமது ஆங்கிலப் புலமையை நிரூபிப்பதற்கு IELTS பரீட்சையில் band 5 பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.