யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியை சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர்

சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதிக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் Bryce Hutchesson யாழ் மாவட்ட பாதுகாப்பு படைக் கட்டளைத் தளபதி மேஜர் ஜென்ரல தர்ஷன கெட்டியாராச்சியை நேற்று (07) சந்தித்தார்.

யாழ். மாவட்ட கட்டளைத் தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண பொதுமக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையிலான தொடர்பாடல் பற்றியும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கை நிலையை உயர்த்துவற்கு செய்ய வேண்டிய வழிவகைகள பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.