அவுஸ்ரேலியாவில் ஈழ அகதி விபத்தில் பலி!

சிட்னியில் உள்ள Pendle Hill பகுதியில் உள்ள Gilba Road இல் புதன்கிழமை பிற்பகல் 1:30 மணியளவில் இடம்பெற்ற வீதிவிபத்தில் தமிழ் அகதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதியால் நடந்து சென்றுகொண்டிருந்த போது பின்னால் வந்த “ட்ரக்” மோதியதால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் மன்னார் பேசாலையை சேர்ந்த 25 வயதுடைய மேர்வின் பெர்ணான்டோ என்ற இளைஞரே உயிரிழந்தவர் ஆவார்.