பொறுப்­புக்­கூறல் முன்­னுள்ள சவால்!

யாழ்ப்­பாண நீதி­மன்­றத்தில் கடந்­த­வாரம் ஒரு வழக்கு நடந்­தது. யாழ். நகரில் பொது இடத்தில், மது­போ­தையில் குழப்பம் விளை­வித்தார் என்ற குற்­றச்­சாட்டில் மூன்று பேரை கைது செய்து நீதிவான் முன்­பாக நிறுத்­தி­யி­ருந்­தனர் பொலிஸ் அதி­கா­ரிகள்.

மன்றில் நிறுத்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு குற்­றப்­பத்­திரம் வாசித்துக் காட்­டப்­பட்ட போது, அவர்கள் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்கள். நீதி­வானும் உட­ன­டி­யாக, ஆளுக்கு தலா 5 ரூபா தண்­டப்­பணம் செலுத்தி விட்டுச் செல்­லுங்கள் என்று உத்­த­ர­விட்டார்.

இதனை விட ஒரு வலு­வான தண்­ட­னையை பெற்றுக் கொடுக்கும் வாய்ப்பை, சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும் அதி­கா­ரி­க­ளான பொலிஸார் தவற விட்­டி­ருக்­கி­றார்கள்.

அதா­வது, மது­போ­தையில் பொது இ­டத்தில் குழப்பம் விளை­வித்­த­வர்கள் மீது, மது­வரிச் சட்­டத்தில் வழக்குத் தாக்கல் செய்­தி­ருந்தால் 2 ஆயிரம் ரூபா வரை குற்­றப்­பணம் அற­வி­டப்­பட்­டி­ருக்க முடியும்.

ஆனால், பொலிஸார் 1866ஆம் ஆண்டு பொலிஸ் சட்­டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்­தி­ருந்­தனர். இதனால் தான், அவர்­களால் 5 ரூபா குற்றப் பணத்­துடன் தப்­பிக்க முடிந்­தது.

இந்தச் சம்­பவம், இலங்­கையில் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்தும், நீதியை நிலை­நாட்டும் வகை­யி­லான முயற்­சி­களில் உள்ள தடை­க­ளையும், தடங்­கல்­க­ளையும் கூட எடுத்துக் காட்­டு­கி­றது.

போர்க்­கா­லத்தில் இடம்­பெற்ற மீறல்கள் மற்றும் காணாமல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்­பது தான், இலங்கை இப்­போது எதிர்­கொண்­டுள்ள மிகப்­பெ­ரிய சவால்.

இலங்­கைக்கு அழுத்தம் கொடுப்­ப­தற்கும், நீதியை நிலை நிறுத்­து­வ­தற்­கான பரிந்­து­ரை­களைச் செய்­வ­தற்கும் ஐ.நா. தொடர்ச்­சி­யான மென் அழுத்­தங்­களைக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­றது.

அதற்­காக ஐ.நாவின் நிபு­ணர்­களும் அடிக்­கடி வந்து சென்று கொண்­டி­ருக்­கி­றார்கள். மனித உரி­மைகள் தொடர்­பான ஐ.நா நிபுணர் Juan Pablo Bohoslavsky நாளை இலங்கை வரப் போகிறார்.

இப்­படிப் பலர் வந்து சென்று ஐ.நாவில் அறிக்­கை­களை சமர்ப்­பிக்­கின்ற போதிலும், போர்க்­கால மீறல்­க­ளுக்குப் பொறுப்­புக்­கூ­று­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் மாத்­திரம், கிட்­டத்­தட்ட பூச்­சிய நிலையில் தான் இருக்­கி­றது.

பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான பொறி­மு­றையை உரு­வாக்­கு­வதும் அதற்­கான சட்­டங்­களை நிறை­வேற்­று­வதும் அர­சாங்கம் இந்தக் கடப்­பாட்டை நிறை­வேற்­று­வ­தற்கு முக்­கி­ய­மா­னது. ஆனால் அந்த விட­யத்தில் எந்த முன்­னேற்­றங்­களும் ஏற்­ப­ட­வே­யில்லை.

ஆயு­தப்­ப­டை­யினர் தண்­ட­னையில் இருந்து தப்­பிக்கும் நிலை தொடர்­கி­றது என்றும், தவறு செய்­த­வர்கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் வரையில், சட்டம், நீதியின் மீது பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நம்­பிக்கை ஏற்­ப­டாது என்றும் ஐ.நா, மற்றும் சர்­வ­தேச அமைப்­புகள் வலி­யு­றுத்­தி­னாலும் அர­சாங்கம் அதனைக் கண்­டு­கொள்­வ­தில்லை.

கொழும்பில் கடந்த 2008- –2009 காலப்­ப­கு­தியில் 11 பேர் கடத்­தப்­பட்டு காணாமல் ஆக்­கப்­பட்ட வழக்கு கடந்­த­வாரம், நீதி­மன்­றத்தில், விசா­ரிக்­கப்­பட்­டது. அந்த வழக்கில் முக்­கி­ய­மான சந்­தேக நபர் நேவி சம்பத். தலை­ம­றை­வாக இருந்த அவர், நீண்ட இழு­ப­றிக்குப் பின்னர் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கிறார்.

அவ­ருக்கு எதி­ராக நீதி­மன்றம் பிடி­யாணை பிறப்­பித்த போது, 5 இலட்சம் ரூபா கொடுத்து வெளி­நாட்­டுக்குத் தப்பிச் செல்­வ­தற்கு உதவி செய்தார் என்று பாது­காப்பு அதி­கா­ரி­களின் பிர­தா­னி­யான அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்ன மீது குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்­ளது.

அட்­மிரல் ரவீந்­திர விஜே­கு­ண­ரத்­ன­வுக்கு எதி­ராக ஆதா­ரங்கள் உள்­ளன என்றும் அவரைக் கைது செய்து விசா­ரிக்கப் போகிறோம் என்றும் குற்றப் புல­னாய்வுப் பிரிவு பல­முறை கூறி விட்­டது. நீதி­மன்­றமும் தேவைப்­பட்டால் கைது செய்து விசா­ரிக்­கலாம் என்று கூறி­யது.

ஆனால் கூட்டுப் படை­களின் தள­பதி நிலையில் உள்­ள­வரைக் கைது செய்­வ­தற்குத் தயங்­கு­கி­றது சி.ஐ.டி. கடந்­த­வாரம் அவரைக் கைது செய்­யு­மாறு நீதி­மன்றம் உத்­த­ரவும் பிறப்­பித்து விட்­டது. ஆனாலும் அவர் அர­சாங்க நிகழ்­வு­களில் அதி­கா­ர­பூர்­வ­மாக கலந்து கொண்டு வரு­கிறார்.

நாளை­யுடன் அவ­ரது பத­விக்­காலம் முடியப் போகி­றது அதற்குப் பின்னர் தான், அவர் கைது செய்­யப்­படும் வாய்ப்­புகள் இருப்­ப­தாகத் தெரி­கி­றது.

ஏற்­க­னவே, ஊட­க­வி­ய­லாளர் கீத் நொயார் கடத்தல் விவ­கா­ரத்தில் இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்­பா­ள­ரான மேஜர் ஜெனரல் அமல் கரு­ணா­சே­க­ரவைக் கைது செய்­வ­தற்கும் நீண்ட இழு­பறி காணப்­பட்­டது.

மூன்று தட­வைகள் அவரைக் கைது செய்­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்ட போதும், பின்னர் அவை கைவி­டப்­பட்­டன. ஒரு­முறை கைது செய்­யப்­ப­ட­வி­ருந்த போது, இரா­ணு­வத்தின் பதில் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்டு விட்டார். அதனால் அந்த வாய்ப்பும் நழு­வி­யது.

கடை­சி­யாக அவர் ஓய்­வு­பெற்ற பின்­னரே, கைது செய்­யப்­பட்டார். இன்­னமும் அவர் விளக்­க­ம­றி­ய­லி­லேயே வைக்­கப்­பட்­டி­ருக்­கிறார். விளக்­க­ம­றி­யலில் இருந்­தாலும், வழக்­கிற்குத் தேவைப்­படும், இரா­ணுவப் புல­னாய்வுப் பிரிவு பற்­றிய இர­க­சியத் தக­வல்­களை வழங்க மறுக்­கிறார் என்ற குற்­றச்­சாட்டு பொலிஸ் விசா­ர­ணை­யா­ளர்­களால் முன்­வைக்­கப்­பட்டு வந்­தது.

கடந்த வாரம் தான், அவர் ஒரு இரா­ணு­வத்தின் இர­க­சிய மறை­விடம் பற்­றிய உண்­மையை தனது சட்­டத்­த­ரணி மூலம் ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார்.

பல்­வேறு கொலைகள், ஆட்­க­டத்­தல்கள் உள்­ளிட்ட மீறல்­களில் ஈடு­பட்­டார்கள் என்ற குற்­றச்­சாட்டில், பல இரா­ணுவ அதி­கா­ரிகள் கைது செய்­யப்­பட்ட போதும், பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்டு விட்­டனர்.

பிணையில் வெளி­வர முடி­யாத வகையில் இவர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த அர­சாங்கம் விரும்­ப­வில்லை.

போரில் வெற்­றியைப் பெற்றுத் தந்த படை­யி­னரைத் தண்­டிக்­கி­றது அர­சாங்கம் என்ற குற்­றச்­சாட்டு எதி­ர­ணியால் கூறப்­ப­டு­வதால், “அடிப்­பது போல அர­சாங்கம் அடிக்­கி­றது, கைது செய்­யப்­ப­டு­ப­வர்­களும் வலிப்­பது போல நடிக்­கி­றார்கள்.

குற்றச் செயல் ஒன்று தொடர்­பாக கைது செய்­யப்­ப­டு­வ­தற்கு அப்பால், குற்­றம்­சாட்­டப்­பட்­ட­வர்கள் மீது வலு­வான சாட்­சி­யங்கள், ஆதா­ரங்கள் முன்­வைக்­கப்­ப­டு­வது தான் முக்­கியம். ஆனால் அது அரிது.

அதை­விட, எந்­தெந்த சட்டப் பிரி­வு­களின் மீது வழக்குத் தாக்கல் செய்­யப்­ப­டு­கி­றது என்­பதும் முக்­கியம்.

அண்­மைக்­கா­லத்தில் உரு­வாக்­கப்­பட்ட மது­வரிச் சட்டம் இருக்க, 150 ஆண்­டு­க­ளுக்கு முந்­திய பொலிஸ் சட்­டத்தை கையில் எடுத்து வழக்கைத் தாக்கல் செய்து வெறும் 5 ரூபா தண்­டத்தை பெற்றுக் கொடுத்­தது போன்ற சம்­ப­வங்கள், போர்க்­கால மீறல்­க­ளுக்­கான பொறுப்­புக்­கூ­ற­லிலும் நடக்­கலாம்.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற முறை­கே­டுகள், மோச­டிகள் தொடர்­பாக பல பிர­ப­லங்கள் கைது செய்­யப்­பட்­டார்கள். விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டார்கள். பின்னர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டனர். இவர்­களில் எத்­தனை பேருக்கு எதி­ராக வலு­வான ஆதா­ரங்­க­ளுடன் வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன?

விசேட நீதி­மன்­றங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. விசா­ர­ணை­களும் நடத்­தப்­ப­டு­கின்­றன. ஆனாலும், எந்தச் சட்டப் பிரிவின் கீழ் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்­பது தான் முக்­கி­ய­மா­னது. அது தான் வழக்கின் தீர்ப்பின் தன்­மையைத் தீர்­மா­னிக்கும்.

கடந்த ஆட்­சியில் இடம்­பெற்ற முறை­கே­டுகள் தொடர்­பாக தொட­ரப்­பட்ட ஒரு வழக்கில், முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சஜின் வாஸ் குண­வர்த்­த­ன­வுக்கு வெறும் 1000 ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்­டது.

ஒரு தவ­றுக்­காக, நீண்ட விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்டு, பெரும் உழைப்பில் வழக்குத் தாக்கல் செய்­யப்­படும் போது, குற்­ற­மி­ழைத்­தவர் குறு­கிய கால தண்­டனை அல்­லது மிகக் குறைந்த அப­ரா­தத்­துடன் தப்­பிக்கும் நிலை உள்­ளது,

ஒரு குற்­றத்­துக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்க மேற்­கொள்­ளப்­படும் நீண்ட புல­னாய்வு மற்றும் தேடல் முயற்­சிகள் மற்றும் தவ­று­களின் கன­திக்கு ஏற்ற வகையில், தண்­ட­னை­களும் அமைய வேண்­டி­யது அவ­சியம்.

ஆனால் பழை­மை­யான சட்­டங்­களின் மூலம் தான் இன்­னமும் தண்­டனை விதிக்­கப்­படும் நிலை உள்­ளது. அதை­விட புதி­ய­தாக உரு­வெ­டுத்­துள்ள குற்­றங்­க­ளுக்கு தண்­டனை விதிக்கும் வகையில் புதிய சட்­டங்­களும் இயற்­றப்­ப­ட­வில்லை.

உதா­ர­ணத்­துக்கு, போர்க்­குற்­றங்கள், மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்கள் விட­யத்தில் இலங்­கையில் எந்தச் சட்­டமும் இல்லை. ஆனால் இந்தக் குற்­றங்கள் அதிகம் இடம்­பெற்­ற­தாக குற்­றம்­சாட்­டப்­படும் நிலையில், அந்தச் சட்­டங்­களின் கீழ் தவறு செய்­த­வர்­களைத் தண்­டிப்­ப­தற்கு ஏற்­பா­டுகள் எதுவும் இல்லை.

இத்­த­கைய சட்­டங்­களை வரை­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் இன்­னமும் எடுக்­கப்­ப­டாத நிலையில் தான், சர்­வ­தேச அரங்­கு­களில் அர­சாங்கம், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நீதியை வழங்க நட­வ­டிக்கை எடுக்­கிறோம் என்ற வாக்­கு­று­தியைக் கொடுத்துக் கொண்டு வரு­கி­றது.

நம்பகமான பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கும் முயற்சிகளும் கூட இன்னமும் எடுக்கப்படவில்லை. அத்தகைய பொறிமுறை உருவாக்கப்பட்டாலும் எந்தச் சட்டங்களின் கீழ் வழக்குத் தாக்கல் செய்வது என்ற கேள்வி இருக்கிறது.

வெறுமனே குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை கைது செய்வது மாத்திரமே தீர்வு அல்ல. ஆனால் அரசாங்கம், அதனைத் தான் இழுத்தடித்துச் செய்து கொண்டிருக்கிறது.

எதிரணியும் அதனை வைத்துத் தான் அரசியல் செய்து கொண்டிருக்கிறது.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை மாறவில்லை. அல்லது குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பிக்கின்ற நிலை தான் தொடருகிறது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் தரப்புகள் கால மாற்றம், தேவைக்கு ஏற்ப புதிய சட்டங்களைக் கையில் எடுக்காமல், குற்றமிழைத்தவர்களை காப்பாற்றும் மனோநிலையில் இருந்து வெளிவராமல் இருக்கும் வரை – குற்றங்களுக்கும் மீறல்களுக்கும் உரிய நீதியைப் பெற்றுக் கொடுத்தல் என்பது எட்டாக் கனி தான் .

நன்றி-வீரகேசரி