தமிழர்களின் ஐக்கியத்தை வலியுறுத்திய முல்லைத்தீவு நிலமீட்புப் போராட்டம்!

முல்லைத்­தீவு மாவட்­டத்­தில் இடம்­பெ­று­கின்ற நில அப­க­ரிப்பு மற்­றும் சிங்­க­ளக் குடியேற்றங்களை எதிர்த்து ஆயிரக்கணக்­கான தமிழ் மக்­கள் கட்சி பேத­மின்றி ஒன்று கூடித் தமது எதிர்ப்­பைத் தெரி­வித்­துள்­ள­னர். முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம்­பெ­றா­தென அர­ச­த­லை­வர் தெரி­வித்­துள்ள நிலை­யி­லும், இந்­தப் போராட்­டம் நடந்து முடிந்­துள்­ளது.

தெற்­கின் பல பிர­தே­சங்­கள் மகா­வலி கங்­கை­யின் நீரால் செழிப்­பு­டன் காணப்­ப­டு­கின்­றன. ஆண்டு தோறும் நீர் கிடைப்­ப­தால் மூன்­று­போக நெற்­செய்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது. இத­னால் விவ­சா­யி­கள் அதிக வரு­மா­னத்தை ஈட்­டிக்­கொள்­கின்ற னர். அநு­ரா­த­புர மாவட்­டத்­தின் வறட்­சி­யான பகு­தி­கள் பச்­சைப் பசே­லெ­னக் காணப்­ப­டு­வ­தற்கு மகா­வலி நீரே கார­ண­மா­கும்.

ஆனால் அநு­ரா­த­பு­ரம்­வரை வந்த மகா­வலி நீரி­னால் அதற்கு அப்­பா­லுள்ள வட­ப­கு­தியை எட்­டிப் பார்க்க முடி­ய­வில்லை. இதற்­கும் இன­வா­தத்­தைத்­தான் கார­ண­மா­கக் கூற முடி­யும். ஆனால் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தி­லுள்ள தமிழ் மக்­க­ளின் காணி­களை அப­க­ரித்து சிங்­க­ளக் குடி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தில் மகா­வலி அபி­வி­ருத்­திச்­சபை முனைப்­பு­டன் செயற்­ப­டு­வதை எவ­ரால்­தான் பொறுத்­துக் கொள்ள முடி­யும்?

முல்­லைத்­தீ­வில் சிங்­க­ள­வர்­கள் குடி­யே­றப்­ப­ட­வில்லை என்­கி­றார் அரச தலை­வர்!

முல்­லைத்­தீ­வில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் கிடை­யா­தென அர­ச­த­லை­வர் அடித்­துக் கூறு­கி­றார். ஆனால் அவ­ரை­யும் மீறி, அவ­ருக்­குத் தெரி­யா­மல் அதி­கா­ரி­க­ளின் அனு­ச­ர­ணை­யு­டன் இந்­தக் குடி­யேற்­றங்­கள் இடம்­பெ­று­கின்­ற­னவா? என்ற சந்­தே­க­மும் கூடவே எழு­கின்­றது.

நாட்­டின் பெரும்­பான்­மை­யின மக்­கள் வாழ்­கின்ற பிர­தே­சங்­க­ளில் ஏரா­ள­மான நிலங்­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டாத நிலை­யில் உள்­ள­போது தமி­ழர் பிர­தே­சங்­க­ளைக் குறி­வைத்து சிங்­கள மக்­க­ளைக் குடி­யேற்­று­வ­தற்கு ஏதே­வொரு உள்­நோக்­கம் இருக்­கத்­தான் வேண்­டும்.

தமிழ் மக்­க­ளின் முக்­கிய தலை­வர்­க­ளில் ஒரு­வ­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை, சேனா­தி­ராசா கூறிய கருத்­துக்­கள் இன்­றைய நிலை­யில் முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றன. சுமார் 40ஆயி­ரம் சிங்­க­ளக் குடும்­பங்­க­ளைக் குடி­யேற்­று­வ­து­தான் மகா­வ­லித் திட்­டத்­தின் முதன்மை நோக்­க­மெ­ன­வும், இதற்­கான சான்­று­கள் தம்­மி­டம் உள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­துள்­ளார். அவர் கூறிய குறித்த தக­வல் உண்­மை­யென்­றால், சிங்­க­ளக் குடி­ யேற்­றங்­க­ளால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வு­கள் மிகப்­பா­ர­தூ­ர­ மா­ன­வை­யா­கவே அமைந்­து­வி­டப் போகின்­றன.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் வாழ்­கின்ற தமிழ் மக்­க­ளின் இருப்பு கேள்­விக் குறி­யாக மாறி­வி­டப்­போ­கின்­றது. அர­ச­த­லை­வர் முல்­லைத்­தீவில் சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் இடம்­பெ­றா­தெ­னக் கூறு­வ­தால் எவ்­வித பய­னும் ஏற்­பட்­டு­வி­டாது. அவர் தமது அதி­கா­ரங்­களை முழு­மை­யா­கப் பயன்­ப­டுத்தி இதனை முற்­றா­கத் தடுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டும். அப்­போ­து­தான் அர­ச­த­லை­வ­ரின் உறு­தி­மொ­ழி­கள்­மீது தமிழ்­மக்­கள் நம்­பிக்கை வைக்க முடி­யும்.

திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றம் கார­ண­மா­கவே மண­லாறு பறிக்­கப்­பட்டு
வெலி­ஓ­யா­வாக ஆக்­கப்­பட்­டுள்ளது

ஏற்­க­னவே மண­லாற்­றில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றம் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் பெரும் தலை­வ­லி­யா­கவே அமைந்­து­விட்­டது. முல்­லைத்­தீ­வி­லி­ருந்து கிழக்கு மாகா­ணத்­துக்­குச் செல்­வ­தா­யின் இந்­தக் குடி­யேற்­றத்தை கடந்தே செல்ல வேண்­டி­யுள்­ளது. அசா­த­ர­ண­மான சூழ்­நிலை ஏற்­ப­டும்­போது இந்­தப் பய­ணம் பாது­காப்­பாக இருக்­காது.

இத­னால் பல மைல்­கள் சுற்­றுப்­பா­தை ­யில் பய­ணிக்க வேண்­டிய அவ­லத்­தை­யும் தமி­ழர்­கள் எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலை உரு­வா­கி­வி­டும். இந்த நிலை­யில் வடக்­கை­யும் கிழக்­கை­யும் இணைக்­கும் பகு­தி­க­ளில் மண­லாறு, வெலி­ஓயா ஆக்­கப்­பட்­டமை போன்று பெரு­ம­ள­வில் சிங்­க­ளக் குடி­ யேற்­றங்­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டால் வடக்­கும், கிழக்­கும் நிரந்­த­ர­மா­கவே பிரிக்­கப்­பட்­டு­வி­டும்.

திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றம் வடக்­கின் இனப்­ப­ரம்­பலை முற்­றா­கவே சீர­ழித்து விடு­மென்­ப­தைக் கூறத்­தே­வை­யில்லை. கிழக்­கைப் போன்று வடக்­கி­லும் தமி­ழர்­கள் தமது பெரும்­பான்மை பலத்தை இழந்து விடு­வார்­கள். அது மட்­டு­மல்­லாது கிழக்கு மாகா­ண­ச­பையை இழந்­த­து­போல வடக்­கி­லும் இடம்­பெற்­று­வி­ட­லாம்.

இந்த நாட்­டில் இன­வா­தம் தலை­வி­ரித்­தா­டு­வதை முல்­லைத்­தீ­வில் இடம்­பெ­று­கின்ற தமி­ழர் விரோத சம்­ப­வங்­கள் உறுதி செய்­கின்­றன. இன­வா­தத்­தைக் கைவிட்­டால் அர­சி­ய­லில் இடம்­கி­டைக்­காது என்­ற­தொரு நிலை இருக்­கும்­வ­ரை­யில் சிறு­பான்­மை­யி­ னத்­த­வர்­கள் இங்கு நிம்­ம­தி­யாக வாழவே முடி­யாது.

முல்­லைத்­தீவு நில மீட்­புப் போராட்­டம் தமி­ழர் தரப்­புக்­க­ளது ஒற்­று­மைக்கு கட்­டி­யம் கூறி­யுள்­ளது

முல்­லைத்­தீ­வில் இடம்­பெற்ற நில­மீட்­புக்­கான போராட்­டம் தமி­ழர்­கள் ஒரே அணி­யில் திரண்டு தமது உரி­மைக்­கா­கப் போராட வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை உணர்த்­தி­யுள்­ளது. ஆளுக்­கொரு அணி, ஆளுக்­கொரு கொள்கை என்று தமி­ழர்­கள் பிரிந்து காணப்­ப­டு­வ­தால் அவர்­க­ளுக்­கெ­தி­ரான திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது இன­வா­தி­க­ளுக்கு இல­கு­வாக ஆகி­விட்­டது.

மிக­வும் மோச­மான கட்­டத்­தைக் கடந்து கொண்­டி­ருக்­கும் தமி­ழர்­கள், தமக்­குள் நில­வு­கின்ற வேற்­று­மை­க­ளைக் களைந்து ஒரே­ய­ணி­யில் திரண்டு தமது பொது எதி­ரிக்கு எதி­ரா­கப் போராட வேண்­டும். முல்­லைத்­தீ­வுப் போராட்­டத்தை இதற்­கொரு உதா­ர­ண­மாக அவர்­கள் எடுத்­துக்­கொள்ள வேண்­டும். இதை­வி­டுத்து அவர்­கள் தமக்­குள் பகை­மையை வளர்த்து பல அணி­க­ளா­கச் சித­றிக் காணப்­பட்­டால் மோச­மான எதிர் விளை­வு­களை அவர்­கள் எதிர்­கொண்­டே­யாக வேண்­டும்.

முல்­லைத்­தீ­வில் இடம்­பெற்ற போராட்­டம் ஓர் ஆரம்­பமே என்­ப­தை­யும் நாம் மன­தில் கொள்ள வேண்­டும். தமது உரி­மை­கள் பறிக்­கப்­ப­டும்­போ­தெல்­லாம் தள­ராது ஒன்று திரண்டு எதிர்­கா­லத்­தி­லும் போரா­ட­வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தை­யும் தமி­ழர்­கள் புரிந்­து­கொள்ள வேண்­டும்.

நன்றி- உதயன்