பூநகரியில் வெடிமருந்துடன் 2 பேர் கைது!

பூநகரியில் வெடிமருந்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூநகரி காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 9. மணியளவில் பூநகரி சோதனை சாவடியில் சந்தேகத்தின் பெயரில் காவல் துறையினர்  மேற்கொண்ட சோதனையின் போது வாகனம் ஒன்றிலிருந்து 1 கிலோ 80 கிரேம் நிறையுடைய வெடி மருந்து காவல் துறையினர் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த வெடிமருந்து கடத்தல் தொடர்பில் இரு சந்தேகநபர்களை காவல் துறையினர்  கைது செய்துள்ளதோடு. குறித்த இருவரும் தேராவில் மற்றும் வலைப்பாடு பகுதிகளைச் சேர்ந்தவர்கள என தெரிவிக்கப்பட்டுள்ளது.