எவ்­வாறு அமை­யப்­போ­கி­றது வடமாகாணசபை தேர்­தல்?

வடக்கு மாகாண சபை, தனது ஆயுள் முடி­வடைவதற்­கான நாள்­களை எண்­ணிக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்­த­வ­ருட இறு­தி­யில் அல்­லது அடுத்த வருட ஆரம்­பத்­தில் வடக்கு மாகாண சபைக்­கான தேர்­தல் இடம்­பெ­று­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் காணப்­ப­டு­கின்­றன.

இத்­த­கை­ய­தொரு பின்­ன­ணி­யில், வடக்கு மாகாண சபைக்­காக நடை­பெ­றப்­போ­கும் புதிய தேர்­தலை பெரும்­பான்­மைக் கட்­சி­கள் இலக்கு வைத்து அதற்­கேற்ப காய் நகர்த்­தல்­க­ளில் ஈடு­ப­டு­வ­தை­யும் அவ­தா­னிக்க முடி­கி­றது.

தென்­னி­லங்­கைக் கட்­சி­க­ளின் வடக்கு நோக்­கிய வருகை

கூட்டு அர­சின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும் வடக்கு தமிழ்­மக்­க­ளது ஆத­ரவை ஈட்­டிக்­கொள்­ளும் முனைப்­பில் வடக்­கு­நோக்­கித் தமது பார்­வையை திருப்­பி­யுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக் கட்சி, அமைச்­சர் ரிசாத் பதி­யூ­தின் ஊடாக வன்னி மாவட்ட தமிழ்­மக்­க­ளது வாக்கு ஆத­ர­வுக்­காக வலை வீசு­கி­றது. யாழ்.மாவட்­டத்து மக்­க­ளது ஆத­ரவை ஐ.தே.கட்­சிக்கு ஈட்­டிக்­கொள்ள ஐ.தே.கட்­சி­யின் யாழ்.மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் ஊடாகக் காய் நகர்த்­து­கின்­றது.

சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி, வன்னி மாவட்ட வாக்­கா­ளர்­க­ளது ஆத­ர­வைப் பெற்­றுக்­கொள்­ளும் பொருட்டு வன்னி மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், பிரதி அமைச்­ச­ரு­மான காதர் மஸ்­தான் ஊடா­க­வும், யாழ்ப்­பா­ணப் மாவட்ட மக்­க­ளது ஆத­ரவை ஈட்­டிக் கொள்ள சுதந்­தி­ரக் கட்­சி­யின் தேசி­யப்­பட்­டி­யல் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும்,பிரதி அமைச்­ச­ரு­மான அங்­க­ஜன் ராம­நா­தன் ஊடா­க­வும் வியூ­கம் வகுத்­துச் செயற்­ப­டு­கின்­றன.

அரச தலை­வர், தலைமை அமைச்­சர் இரு­வ­ரி­ன­தும் தொடர்ச்­சி­யான வடக்கு நோக்­கிய வரு­கை­கள்­கூட மிக விரை­வில்­இ­டம்­பெ­ற­வுள்ள மாகாண சபைத் தேர்­தலை இலக்கு வைத்­துத்­தானா என்­றும் எண்­ணத் தோன்­று­கி­றது. அதுவே யதார்த்­த­மும்­கூட.

என்ன செய்­கி­றது கூட்­ட­மைப்பு?

முன்­னைய கால­கட்­டங்­க­ளைப் போன்­றல்­லாது, தென்­னி­லங்­கைக் கட்­சி­கள் இவ்­வாறு வடக்­கில் மும்­மு­ர­மாக தேர்­த­லில் கள­மி­றங்க முக்­கிய கார­ணம், நடந்து முடிந்த உள்­ளு­ராட்­சிச் சபை­க­ளுக்­கான தேர்­த­லில் வடக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு பெரும் பின்­ன­டை­வைச் சந்­திக்க நேர்ந்­த­மை­தான் என்­பது தெட்­டக்­தெ­ளி­வாக புலப்­ப­டும் உண்­மை­யா­கும்.

ஆனால் கடந்த உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் புதிய தேர்­தல் நடை­மு­றை­யொன்­றுக்கு அமைய நடத்­தப்­பட்­ட­தா­லேயே தமது வாக்கு வங்கி சரிந்­தது என்று தமிழ்த்­தே­சி­யக் கூட்­ட­மைப்பு கார­ணம் முன்­வைப்­ப­தை­யும் இங்கு கவ­னிக்க வேண்­டும். ஆனால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தனது முன்­னைய பலம் வாய்ந்த நிலை­யில் தற்­போது இல்லை என்­பது, கைப் புண்­ணுக்கு கண்­ணாடி தேவை­யில்லை என்­கிற நிலை­யில் தெட்­டத் தெளி­வா­கப் புலப்­ப­டும் உண்மை நிலை­யா­கும்.

சம்­பந்­த­ரும் விக்­னேஸ்­வ­ர­னும் தத்­த­மது ‘ஈகோ’­­­­வைக் கைவிட வேண்­டும்

அண்­மைக் கால­மா­கத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­குள் இடம்­பெற்ற பிள­வு­கள், கருத்து மோதல்­கள் என்­பவை அந்த அமைப்பு நலி­வ­டை­யக் கார­ண­மா­கி­யுள்­ளன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­ரும், அவ­ரது தய­வால் வடக்­கில் ஆட்­சிபீ­டம் ஏறிய வடக்கு மாகாண முதல்­வர் விக்­னேஸ்­வ­ர­னும் எதி­ரெ­திர்த் திசை­யில் பய­ணித்­துக் கொண்­டி­ருப்­பது தமி­ழர்­க­ளின் அர­சி­யல் ஸ்திரத்­தன்­மைக்கு நல்ல அறி­கு­றி­யல்ல.

இரு­வ­ரும் தத்­த­மது நிலைப்­பாட்டை விட்­டுக்­கொ­டுக்­காத தன்­மை­யைக் கைவிட்டு (ஈகோ) தமக்­கி­டையே பேச்சு நடத்த வேண்­டும். முதல்­வர் அணி, சம்­பந்­த­ரின் அணி என்­கிற எண்­ண­வோட்­டங்­களை விடுத்து, தமி­ழர்­க­ளின் அணி என்­கிற வகை­யில் அவர்­கள் தமது அர­சி­யல் நிலைப்­பாட்­டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்­டும்.

அவ்­வா­றா­ன­தொரு நிலை ஏற்­ப­டு­மா­யின் தென்­னி­லங்­கைக் கட்­சி­க­ளின் ஊடு­ரு­வல் பிசு­பி­சுத்­துப்­போய்­வி­டும் . இல்­லா­வி­டில் தென்­னி­லங்­கைப் பெரும்­பான்­மைக் கட்­சி­க­ளின் ஆதிக்­கம் வட­ப­கு­தித் தேர்­த­லில் கணி­ச­மான அள­வுக்­கு­ஆ­திக்­கம் செலுத்­தும் நிலை தவிர்க்க இய­லாத ஒன்­றா­கி­வி­டும்.

நன்றி-உதயன்