சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார்!

நாடாளுமன்ற  சம்பிரதாயத்துக்கமைய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுவார் என, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார்.

தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கான அதிகாரம், அரசமைப்பிலோ மற்றும் சம்பிரதாயத்தின் பிரகாரமோ அதிகாரமில்லையென, சபாநாயகர் கருஜயசூரிய, சபைக்கு அறிவித்தார்.

நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று (10) கூடியது. இதன்போது சபாநாயகர் அறிவிப்பின் போதே மேற்கண்டவாறு அறிவிப்பு விடுக்கப்பட்டது.