வடக்­குத் தொடர்­பாக பிறந்த திடீர் ஞானம்!

வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பாக அர­சி­யல் தலை­வர்­க­ளுக்­குப் பிறந்த திடீர் ஞானம் தமிழ் மக்­களை வியக்க வைத்­துள்­ளது. இந்­திய அர­சின் நிதி­யு­த­வி­யு­டன் இடம்­பெற்ற நோயா­ளர் காவு வண்­டி­யின் இல­வச சேவைக்­கான ஆரம்ப நிகழ்­வின்­போது இதை அவ­தா­னிக்க முடிந்­தது.
இலங்­கை­யின் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஏனைய பிர­தே­சங்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது வட­ ப­கு­தி­யில் அபி­வி­ருத்தி திட்­டங்­கள் இடம்­பெற்­ற­தா­கத் தெரி­ய­வில்­லை­யெ­னக் கூறி­யுள்­ளார்.

இந்த நிகழ்­வில் காணொலி மூல­மாக உரை­யாற்­றிய இந்­தி­யத் தலைமை அமைச்­சர் நரேந்­திர மோடி, வட­ ப­குதி மக்­க­ளின் கண்­ணீ­ரைத் துடைத்து அவர்­களை வள­மான எதிர்­கா­லத்­துக்கு இந்­தியா இட்­டுச் செல்­லு­மெ­னத் தெரி­வித்­துள்­ளார். இரண்டு தலைமை அமைச்­சர்­க­ளும் கூறி­ய­தைக் கேட்­கும்­போது மகிழ்ச்­சி­யா­கத்­தான் இருக்­கின்­றது. ஆனால் தமி­ழர்­கள் தாம் கடந்து வந்த பாதை­யை­யும் ஒரு­க­ணம் சிந்­தித்­துப் பார்க்க வேண்­டும். தமி­ழர்­கள் இந்த நாட்­டில் மகிழ்ச்­சி­யாக இருந்­த­தா­கச் சரித்­தி­ரமே கிடை­யாது. மகிழ்ச்­சி­யாக இருப்­ப­தற்கு அவர்­கள் அனு­ம­திக்­கப்­ப­ட­வில்லை என்­ப­து­தான் உண்மை.

வேடிக்­கை­யான வெளிப்­பா­டு­கள்

தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க வடக்­கின் அபி­வி­ருத்தி தொடர்­பா­கக் கருத்து வெளி­யிட்­டமை வேடிக்­கை­யா­னது. போர் ஓய்ந்து 10ஆண்­டு­கள் ஆகி­விட்ட நிலை­யில் வடக்கு அபி­வி­ருத்­தி­யைக் காண­வில்­லை­யென அவர் கூறி­யி­ருப்­பதை எந்த வகை­யில் எடுத்­துக்­கொள்­வது என்­பது புரி­ய­வில்லை. நாட்­டின் பிற­ப­கு­தி­கள் அபி­வி­ருத்தி கண்ட நிலை­யில் காணப்­ப­டும்­போது வட­ப­குதி அபி­வி­ருத்­தி­யைக் காணாது மிக­வும் பின்­தங்­கிய நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது.

இங்­குள்ள இளை­ஞர் யுவ­தி­கள் தொழில் வாய்ப்­பின்றி வேத­னை­யு­டன் தமது காலத்­தைக் கடத்தி வரு­கின்­ற­னர். இவர்­க­ளுக்­குத் தொழில் வாய்ப்­பினை வழங்க வேண்­டியது அரசின் கடமை. அரசு அதற்­கான எந்த முயற்­சி­யை­யும் மேற்­கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை. தெற்­கில் அரசு கொண்­டுள்ள அக்­க­றை­யில் ஒரு சத­வீ­தத்­தைத்­தா­னும் வடக்­கில் கொண்­டி­ருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. இந்த மாற்­றாந்­தாய் மனோ­பா­வம் இன்று நேற்­றல்ல பல ஆண்­டு­க­ளா­கத் தொடர்ந்த வண்­ணம் காணப்­ப­டு­கின்­றது. தெற்­கின் இந்த மன­நி­லை­தான் தமி­ழர்­க­ளின் ஆயு­தப் போராட்­டத்­துக்கு வழி­வ­குத்­தது. ஆனா­லும் தெற்கு அர­சி­யல்­வா­தி­கள் இன்­ன­மும் திருந்­தி­ய­தா­கத் தெரி­ய­வில்லை.

ஒரு நாட்­டின் தலைமை அமைச்­சர் என்ற வகை­யில் சகல பிர­தே­சங்­க­ளின் நில­வ­ரங்­கள் தொடர்­பான பூரண அறிவு அந்­தப் பத­வியை வகிப்­ப­வ­ரி­டம் இருத்­தல் வேண்­டும். சகல பிர­தே­சங்­க­ளும் சம­னாக அபி­வி­ருத்தி செய்­யப்­ப­டு­வதை அவர் உறு­தி­செய்ய வேண்­டும். ஆனால் இலங்­கை­யின் தலைமை அமைச்­சர் அந்­தப் பொறுப்­பி­லி­ருந்து தாம் வில­கி­யதை சொல்­லா­மல் சொல்­கின்­றார். வட­ப­கு­தி­யின் அபி­வி­ருத்தி தொடர்­பா­கத் தாம் இப்­போ­து­தான் புரிந்­து­ கொண்­ட­தாக அவர் காட்­டிக் கொள்­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை.

காவு வண்­டி­களை தந்­தால் போதுமா?

இந்­தி­யா­வின் நிதி­யு­த­வி­யு­டன் வட­ப­கு­தி­யில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள இல­வச நோயா­ளர் காவு வண்­டிச் சேவை தொடர்ந்து இடம்­பெ­று­மா­னால் இப்­ப­குதி மக்­க­ளுக்கு பெரி­தும் பய­னுள்­ள­தாக இருக்­கு­மென்­ப­தைக் கூறத் தேவை­யில்லை. ஆனால் இந்­தி­யா­வின் கடமை இத்­து­டன் நிறை­வு­பெற்­று­விட்­ட­தாக எவ­ரும் கூறி­விட முடி­யாது. ஏனென்­றால் வட­ப­குதி மக்­கள் அனு­ப­வித்த துய­ரங்­க­ளுக்கு இந்­தி­யா­வும் ஒரு கார­ண­மாக இருந்­துள்­ளது. புலி­களை அழிப்­ப­தா­கக் கூறிக்­கொண்டு அப்­பா­வித் தமி­ழர்­கள் கொன்று குவிக்­கப்­பட்­ட­தில் இந்­தி­யா­வின் பங்கு அளப்­ப­ரி­யது.

போரில் இலங்கை அர­சுக்­குத் தேவை­யான சகல உத­வி­க­ளை­யும் வழங்­கிய இந்­தியா மறை­மு­க­மாகவும் நேர­டி­யா­கவே போரில் தன்னை ஈடு­ப­டுத்­திக் கொண்­டது.

ஆனால் போர் முடி­வ­டைந்த பின்­னர் தனது கடமை முடிந்­து­விட்­ட­தாக இந்­தியா ஒதுங்­கிக் கொண்­டது. இதுவட­ப­கு­தித் தமி­ழர்­க­ளுக்­குச் செய்த மிகப்­பெ­ரிய துரோ­க­மா­கும். போரி­னால் சின்­னா­பிக்­க­ மாக்­கப்­பட்ட வட­ப­கு­தி­யின் அபி­வி­ருத்­திக்கு உட­ன­டி­யா­கவே இந்­தியா உதவி செய்­தி­ருக்க வேண்­டும். இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பில் இலங்­கைக்­குக் கடு­மை­யான அழுத்­தத்தை வழங்­கி­யி­ருக்க வேண்­டும். இந்­தி­யத் தலைமை அமைச்­ச­ரான நரேந்­தி­ர­மோடி தனது இலங்­கைப் பய­ணத்­தின் போது குடா­ நாட்­டுக்­கும் வருகை தந்­தி­ருந்­தார். அப்­போது சில வாக்­கு­று­தி­க­ளை­யும் கூறிச் சென்­றார். ஆனால் ஒன்­றுமே நடக்­க­வில்லை. தற்­போ­தும் வட­ப­குதி மக்­க­ளின் அபி­வி­ருத்தி தொடர்­பா­கப் பேசி­யி­ருக்­கி­றார். இது­வும் பத்­தோடு பதி­னொன்­றாக மறக்­கப்­பட்­டு­வி­டு­மா­வென வட­ப­குதி மக்­கள் வினா எழுப்­பு­கின்­ற­னர்.

இரு நாட்­டுத் தலைமை அமைச்­சர்­க­ளும் தமி­ழர்­களை இனி­யும் ஏமாற்­றத்­தில் ஆழ்த்­து­வது அவர்­க­ளுக்கு அழ­காக இருக்­காது. அவர்­கள் எந்த வகை­யி­லா­வது அவர்­க­ளின் அபி­வி­ருத்­திக்கு உத­விட வேண்­டும். இதன் மூல­மா­கவே கடந்த காலத் தவ­று­க­ளும் மறக்­கப்­பட்­டு­வி­டும்.

நன்றி-உதயன்