ஜெனிவா தீர்மானித்திற்கு அமெரிக்கா தொடர்ந்தும் ஆதரவு!

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நிறைவேற்றும் விடயத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் தனது ஆதரவை வழங்கும்” என அமெரிக்க தூதரக அதிகாரி வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் பிரதி தூதுவர் ரொபேர்ட் ஹில்டன் தனது டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரனை சந்தித்தவேளையே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான அர்ப்பணிப்பு இலங்கை அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் உறவை விஸ்தரிப்பதற்கு உதவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தினேன் என அவர் தெரிவித்துள்ளார்.