இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உள்பட 24 பேர் பலி!

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உள்பட 24 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தோனேசியாவில் உள்ள சுலாவெசி தீவில் இருந்து அருகில் உள்ள சிலாயர் தீவுக்கு படகில் 139 பேர் சென்றுள்ளனர். கரையில் இருந்து 300 மீட்டர் தூரம் சென்ற நிலையில் மோசமான வானிலை காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குழந்தைகள் உள்பட 24 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

74 பேர் உயிருடன் உள்ளனர். பயணிகள் உயிர்காப்பு கவசம் அணிந்திருந்ததால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகியது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சுமத்ராவில் உள்ள பிரபல ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 160க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடியும் யாரும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்களை தேடும் பணி கைவிடப்பட்ட நாளில் சுலாவெசியில் படகு விபத்து நடந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். குழந்தைகள் உள்பட 24 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

74 பேர் உயிருடன் உள்ளனர். பயணிகள் உயிர்காப்பு கவசம் அணிந்திருந்ததால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் தாமதமாகியது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சுமத்ராவில் உள்ள பிரபல ஏரியில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 160க்கும் மேற்பட்டோர் மாயமாகினர். அவர்களை தேடியும் யாரும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்களை தேடும் பணி கைவிடப்பட்ட நாளில் சுலாவெசியில் படகு விபத்து நடந்துள்ளது.