கஜேந்­தி­ர­கு­மாரை தலை­வர் பிரபாகரனோடு ஒப்பிட்டு பேசி­யமை சரியானதே!

தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லத்தை, தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­னோடு ஒப்­பிட்டு, அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் பேசி­யி­ருந்­தார். அது வர­வேற்­கப்­ப­ட­வேண்­டிய விட­யம்.

தலை­வர் பிர­பா­க­ரன் தமிழ் மக்­க­ளுக்குத் தீர்­வாக எதைக் கொடுக்க முயன்­றாரோ, அந்­தக் கொள்­கை­யில்­தான் கஜேந்­தி­ர­கு­மா­ரும் போராடி வரு­கின்­றார். இவ்­வாறு ஈ.பி.ஆர்.எல்.எவ். அமைப்­பின் மாகா­ண­சபை உறுப்­பி­னர் ம.தியா­க­ராசா தெரி­வித்­தார். வவு­னி­யா­வில் செய்­தி­யா­ளர்­களை நேற்­றுச் சந்­தித்­த­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் டெனீஸ்­வ­ரன் வழக்­குத் தொடுத்­தமை உண்­மை­யில் வருத்­தத்­துக்­கு­ரிய விட­யம். மாகாண சபைக்கு அதி­கா­ரங்­கள் இல்லை என்­ப­தும் நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது.

முத­ல­மைச்­ச­ரைப் பத­வி­யி­லி­ருந்து வில­க­வேண்­டும் என்று எதிர்­க்கட்­சித் தலை­வர் கூறி­யி­ருக்­கின்­றார்.

அவ­ரது கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­களே அவரை எதிர்­க்கட்­சித் தலை­மைப் பத­வி­யி­லி­ருந்து வில­கு­மாறு கூறும்­போது, வில­கா­மல் கங்­க­ணம் கட்­டித் திரி­யும்­போது முத­ல­மைச்­ச­ரைப் பதவி வில­கக் கோரு­வது வேடிக்­கை­யா­னது.

புதிய அர­ச­மைப்­பில் எது­வும் இல்லை என்று முத­ல­மைச்­சர், கஜேந்­தி­ர­கு­மார், சுரேஷ் பிரே­ம­ச்சந்­தி­ரன் ஆகி­யோர் கூறி­ய­போ­தும், கூட்­ட­மைப்பு அதில் அதி­கா­ரங்­கள் இருப்­ப­தா­கக் கூறு­கின்­றது. இது ஏமாற்­று­கின்ற விட­ய­மா­கும்.

முத­ல­மைச்­ச­ரின் புத்­தக வெளி­யீட்­டில், தமிழ் மக்­க­ளின் தீர்­வுக்­காக தமிழ்க் கட்­சி­கள் மற்­றும் தமிழ்த் தலை­மை­கள் ஒன்­றி­ணை­ய­வேண்­டும் என்று சம்­பந்­தன் ஐயா கூறி­யி­ருந்­தார். இது மக்­களை ஏமாற்­றும் செயற்­பாடு. ஒன்­றி­ணை­ய­வேண்­டும் எனக்­கூ­றிக் கொண்டு நிலக்­கீழ்(அண்­ட­கி­ற­வுண்ட்) வேலை­கள் செய்­யும் கீழ்த்­த­ர­மான நட­வ­டிக்கை எடுக்­கும் கட்­சி­யு­டன் இணை­வது என்­பது சாத்­தி­யப்­ப­டாத விட­யம்.

எதிர்­வ­ரும் தேர்­தல்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஒன்­றி­ணைக்­கின்­றதோ இல்­லையோ, தமிழ் மக்­கள் ஒன்­றி­ணை­ய­வேண்­டும். கேலிக் கூத்­தான அர­சி­யல்­வா­தி­க­ளைப் புறம் தள்ளி நேர்­மை­யா­ன­வர்­கள் தலை­மையை ஏற்­கும் நிலைக்கு தமிழ் மக்­கள் வந்­து­விட்­டார்­கள்.

<p>நீதி­ய­ர­சர் விக்­னேஸ்­வ­ரன் எமக்­குத் தலை­மைத்­து­வம் தர­வேண்­டும். அவ­ரோடு கஜேந்­தி­ர­கு­மா­ரும் இணைந்து தமிழ் மக்­க­ளுக்­குத் தீர்­வைப் பெற்­றுத்­தர முன்­வ­ர­வேண்­டும் . என்­றார்.