புகலிடம் கோருவோரை ஏற்க முடியாது! – அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியாவில் அதிகளவிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் தஞ்சம் பெறும் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவுஸ்திரேலியாவின் லிபரல் கட்சி உறுப்பினர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

தி ஒஸ்ட்ரேலியன் இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த 5 ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை தடுக்க முடியாமல் இருக்கும் நிலையினை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கையினை அவுஸ்திரேலியா எடுக்கத் தவறுமாயின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சனைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கையினையும் விடுத்துள்ளார்.