பாறைகளுக்கு நடுவே குளித்த ஒருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்!

அவுஸ்திரேலியாவில் பாறைகளுக்கு நடுவே குளித்த ஒருவர் கடல் அலையினால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் டாஸ்மேனியா கடல் பகுதியில் நண்பர்கள் இருவர் குளித்து கொண்டிருந்தனர்.

அவர்கள் இருந்த பகுதி பாறை என்பதால் அதனுள் பாய்ந்து செல்லும் அலை மீண்டும் வாரிச் சுருட்டி கடலுக்குள் செல்லும். அதில் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் அலையால் இழுக்கப்பட்டு மீண்டும் பாறைப் பகுதிக்கு வந்துவிட்டார்.

அடுத்த அலையின் போது மற்றொரு நண்பர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

காணாமல் போனவரைத் தேடும் பணியில் காவல் துறையினர் , கடலோர காவல் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.