1.1 மில்லியன் பெறுமதியான வீடு எரிந்து சாம்பலானது!

அவுஸ்திரேலியாவில் 1.1 மில்லியன் ரூபாய் பெறுமதி வாய்ந்த வீடு சில மணி நேரத்தில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

விற்பதற்கு முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் (Brisbane) நகரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது என பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார்.

மேலும் குறித்த வீட்டுப் பெண் தனது நாயை வாக்கிங்கு அழைத்துக் கொண்டு வெளியே சென்றமையால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

டிம்பர் மரத்திலான இரு வீடுகள் பற்றி எரிவதைப் பார்த்த அயலவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னர் தீ அணைக்கப்பட்டுள்ளது.

முழுவதும் மரத்திலான இந்த வீட்டை இன்னும் சில தினங்களில் விற்பதற்காக பேரம் பேசிய வீட்டின் உரிமையாளர் ஒரே நாளில் தரைமட்டமானது வீடு மட்டுமல்ல எனது கனவும் என கூறி கண்கலங்கியுள்ளார்.