தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி போராட்டம்!

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத கடல் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் முதன்மை வீதியிலுள்ள மீனவ சமாச முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலம்,முதன்மை வீதியூடாக யாழ். மாவட்டச் செயலகத்தை சென்று நிறைவடைந்தது.

மாவட்டச் செயலரிடம் மீனவர்கள் மனுவைக் கையளித்தனர்.