5வது நாளாகவும் தொடரும் அகழவுப் பணி!

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள லங்கா சத்தொச நிறுவன வளாகத்தில் மனித எச்சங்களை தேடி மேற்கொள்ளப்படும் அகழவுப் பணிகள் 5வது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

கடந்த திங்கட்கிழமை முதல் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜாவின் முன்னிலையில் இந்த பணிகள் இன்றும் இடம்பெற்றது.

இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான அகழ்வு பணிகள் மாலை 5 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதுவரை மனித எலும்புகள், பற்கள்,தடையப்பொருட்களான பொலித்தீன் பக்கற்,போத்தல் மூடி உள்ளிட்ட சில தடையப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.