மௌன ராகம் தொடரால் கிருத்திகாவின் கற்றல்?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் மௌன ராகம் என்ற நாடகத் தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரங்களில் பலரின் மனதை வென்றுள்ளவர் வேலன் என்கிற கிருத்திகா.

வேலன் என்று கூறினால் தான் இவரை அதிக பேருக்கு அடையாளம் தெரியும். மிகவும் பரப்பரப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த நாடகத்தில் கிருத்திகாவுக்குதான் முக்கிய பாத்திரம் என கூறலாம்.

இவர் சமீபத்திய ஒரு பேட்டியில், எனக்கு பெங்களூரில் பள்ளி படிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் இந்த நாடக தொடர் காரணமாக என்னால் அங்கு படிக்க முடியவில்லை.

நாடக தொடர் முடிந்ததும் உடனே அங்கு போய் படிப்பேன். எனக்கு பிடித்த பாடம் ஆங்கிலம் எனவும் , அதில் நான் நிறைய மதிப்பெண் எடுப்பேன் எனவும் குழந்தை நச்சத்திரம் கிருத்திகா தெரிவித்துள்ளார்.