எதிர்க்கட்சித் தலைவர் குறித்து முறைப்பாடு!

எதிர்க்கட்சித் தலைவர் குறித்து சர்வதேச நாடாளுமன்ற சங்கத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிசிர ஜெயகொடி தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பை சேர்ந்த 93 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 70 பேர் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

“எனினும், 16 பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளமை பிரச்சினைக்கு உரிய விடயம்” என ஒன்றிணைந்த எதிரணியினர் தெரிவித்துள்ளனர்.

எனவே, இது தொடர்பில் சர்வதேச நாடாளுமன்ற சங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக முறைப்பாடு செய்யவுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி குறிப்பிட்டுள்ளது.