தகவல் அறியும் உரிமைச் சட்டம் பொதுமக்­களை முறை­யாகச் சென்­ற­டைய வேண்டும்!

தகவல் அறியும் உரி­மைச்­சட்­ட­மா­னது தற்­போது எமது நாட்டில் நடை­மு­றையில் உள்­ளது. எனினும் இது தொடர்­பான விளக்கம் பொதுமக்­களை முறை­யாகச் சென்­ற­டைய வேண்டும்.

தகவல் அறியும் உரி­மைச்­சட்டம் தொடர்பில் மக்­களை விழிப்­பூட்டும் செயற்­பாட்டை ஊட­க­வி­ய­லா­ளர்கள் இல­கு­வாக மேற்­கொள்ள முடியும் என இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தின் தலைவர் குமார் நடேசன் தெரி­வித்தார்.

இலங்­கையில் தகவல் அறியும் உரி­மைச்­சட்டம் நடை­மு­றை­ப்படுத்­தப்­பட்டு ஓராண்டு நிறை­வ­டை­வ­தனை முன்­னிட்டு “தகவல் அறியும் உரிமை தொடர்பில் மக்­களை விழிப்­பூட்டல்” எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான சர்­வ­தேச மாநாடு இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாபனம் மற்றும் நோர்வே தூது­வ­ரா­லயம் என்­ப­வற்றின் ஏற்­பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை(08-05-2018) கொழும்பில் ஆரம்­ப­மா­னது. அந்­நி­கழ்வில் தொடக்­க­வுரை ஆற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.