செய்திமுரசு

இறைச்சி சாப்பிடும் விநாயகர் விளம்பர தடைக்கு அவுஸ்ரேலியா மறுப்பு

விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்தை தடை செய்ய முடியாது என அவுஸ்ரேலியா நிறுவனம் மறுத்து விட்டது. இந்து கடவுளான விநாயகர் உள்பட பல மத கடவுள்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்து அமைப்புகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தன. இந்த விளம்பரத்தை தடை செய்ய வலியுறுத்தி அவுஸ்ரேலியாவில் உள்ள ‘ஏ.எஸ்.பி.’ நிறுவனத்தில் ஏராளமான புகார்கள் குவிந்தன. அதன் மீது விசாரணை நடத்திய இந்த நிறுவனம் விநாயகர் ஆட்டிறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரத்தை தடை ...

Read More »

இந்தியா-அவுஸ்ரேலியா 21-ந்திகதி கொல்கத்தாவில் மோதல்!

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது. இப்போட்டி நடைபெறும் 21-ந்திகதி பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இந்தியா- அவுஸ்ரேலியா அணிகள் மோதும் 5 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சென்னையில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் வருகிற 21-ந்திகதி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது. இதற்காக இந்தியா, ...

Read More »

தலைவர் பிரபாகரன் எங்கே? – திருமதி தமிழ்செல்வன்

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்து ஜோசப் முகாமில் வைத்து தன்னிடம் மீண்டும் மீண்டும் விசாரணை செய்ததாக, விடுதலைப்   புலிகள் அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 36வது கூட்டத்தொடர் கடந்த 11ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் அரங்கில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கையில் அதிகளவில் சித்திரவதைகள் இடம்பெறும் ஜோசப் முகாமிற்கு எனது பிள்ளைகளுடன் என்னையும் ...

Read More »

திருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து!

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி, இளமாறன், அருண், டைசன் ஆகிய 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் போரில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த மே மாதம் 21-ந்திகதி சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தினார். ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி மெரினாவில் நடந்து வந்தது. இந்த ஆண்டு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை. போலீசாரின் அனுமதியின்றி நிகழ்ச்சியை நடத்தியதாக திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ...

Read More »

தந்தைக்கு எதிராக களமிறங்கும் மகள்!

ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தாம் பிரச்சாரம் செய்யப்போவதாக முன்னாள் பிரதமர் Tony Abbott இன் மகள் Frances Abbott அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை கடுமையாக எதிர்ப்பவர் முன்னாள் பிரதமர் Tony Abbott என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் Tony Abbott க்கு எதிராக அவரின் மகள் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணங்களை அங்கீகரிப்பதா என்று அடுத்த மாதம் – அக்டோபர் மாதம் 11 ஆம் திகதி தொடங்கும் அஞ்சல் வழி ...

Read More »

சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திட்டம்!

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் இந்திய தொழிலதிபர் Gautam Adani அமைக்கும் நிலக்கரி சுரங்க வேலைகள் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது. இதன் பின்னணியில் இந்த முயற்ச்சியை எதிர்த்து தாம் இன்று இரவு முதல் ஒரு வாரகாலம் குயின்ஸ்லாந்து மாநிலத்தின் Bowen எனுமிடத்தில் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக Frontline Action on Coal and Reef Defenders எனும் அமைப்பு அறிவித்துள்ளது. 16.5 பில்லியன் செலவில் உருவாகும் இந்த சுரங்கத் திட்டம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தரும் என்று குயின்ஸ்லாந்து மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடல் உயிரினங்களை ...

Read More »

அவுஸ்ரேலியா: கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாடல் அழகி பலி

அவுஸ்ரேலியாவில் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் மாடல் அழகி, இரண்டு சகோதரர்களுடன் பரிதாபமாக உயிரிழந்தனர். அவுஸ்ரேலியாவை சேர்ந்தவர் ப்ரீ கெல்லர் (22). பிகினி மாடல் அழகி. இவர் ரூ.1 கோடி மதிப்புள்ள நிஸான் ஜி.டி.ஆர். ஸ்போர்ட்ஸ் என்ற காரை வாங்கியிருந்தார். கார் வாங்கிய 7-வது நாள் இரவு தனது அண்ணன்கள் ஸ்டீவ், ஜெப் ஆகியோருடன் காரில் வெளியே சென்றார். இரவு 3 மணியளவில் இவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கவிழ்ந்தது. அதில் மாடல் ...

Read More »

தவறு செய்யவில்லை எனில் தண்டனை குறித்து அஞ்ச வேண்டியதில்லையே!

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் ஈடுபட்ட படையினர் எவரும், தாம் குற்றங்கள் எதையும் செய்யாவிடின் எந்தக் கவலையும் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ”காணாமல் போனோர் பணியகம் தனியே வடக்கு, கிழக்கு மக்களுக்காக அமைக்கப்படவில்லை. தெற்கிலுள்ள மக்களுக்காகவும் தான் அமைக்கப்பட்டுள்ளது. போரில் ஈடுபட்ட படையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகத் தான் இந்தப் பணியகம் அமைக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிரணியினர் கூறுகின்றனர். தாம் எந்தத் தவறையும் செய்யவில்லை என்று இதயபூர்வமாக நம்புகின்ற எந்த படைவீரரும், இதுபற்றி ...

Read More »

சுறா மீன் குட்டிக்காக தற்காலிக உப்பு நீர்த்தொட்டி!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மேன்லி கடற்கரையில், சுறா மீன் குட்டி ஒன்று கரை ஒதுங்கியது. இதனைத்தொடர்ந்து அந்த சுறா மீன் குட்டியை கடலில் கொண்டுசென்று விட்டனர். ஆனால், அது மீண்டும் கரையைத் தேடி வந்துள்ளது. இவ்வாறு 7 முறை கடலில் விடப்பட்டும், சுறா கரை ஒதுங்கியதால், அதனை காப்பாற்ற தற்காலிக உப்பு நீர்த்தொட்டி உருவாக்‍கப்பட்டுள்ளது. தற்போது இந்த உப்பு நீர்த்தொட்டியில் சுறா மீன் குட்டி விடப்பட்டுள்ளது. எனவே, அந்த சுறாவை உப்பு நீர்த்தொட்டியில் பாதுகாத்து, ஓரிரு நாட்கள் கண்காணித்த பின் ஆழ்கடலில் விட, கடல் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் R U OK தினம்!

அவுஸ்திரேலியாவில் 14 ஆம் திகதி R U OK? தினம் கடைபிடிக்கப்படுகிறது. உங்கள் அருகில் இருக்கும் ஒருவர், அல்லது தெரிந்தவர்களிடம் கேளுங்கள். “நீங்கள் நலமா?” R U OK என்ற ஒற்றைக் கேள்வியால் துயரங்கள் விலகிச் செல்லலாம். ஒருவர் மீதுள்ள அன்பில்பால் நாம் கேட்கும் கேள்விகள் மனதை ஆற்றுப்படுத்த பெரிதும் உதவலாம் இல்லையா..?

Read More »