திரைமுரசு

என்னை போன்றவர்கள் சினிமாவை விட்டு வெளியேற வேண்டுமா?

65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை தனது மனதை மிகவும் பாதித்ததாக அமிதாப்பச்சன் காட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சினிமா படப்பிடிப்புகளில் 65 வயதை தாண்டியவர்கள் பங்கேற்க கூடாது என்று மராட்டிய மாநில அரசு சமீபத்தில் நிபந்தனை விதித்ததை எதிர்த்து கோர்ட்டில் தொடர்ந்து வழக்கில் அரசின் நிபந்தனை ரத்து செய்யப்பட்டு 65 வயதுக்கு மேற்பட்டோர் படப்பிடிப்பில் பங்கேற்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதுகுறித்து அமிதாப்பச்சன் கூறியிருப்பதாவது: “65 வயதுக்கு மேற்பட்டவர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்கக் கூடாது என்ற அரசின் நிபந்தனை ...

Read More »

கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்?

இயக்குனர் செல்வராகவன் கடந்த காலத்தில் ஒரு நாள் திரும்பிக் கிடைத்தால் என்ன கேட்பீர்கள்? என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் செல்வராகவன். இதையடுத்து, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் ஆகிய படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார் செல்வராகவன். பொதுவாக அதிகம் சமூகவலைதளங்கள் ...

Read More »

எல்லா கதாநாயகர்களும் அதிரடி கதாநாயகனாக வேண்டும் என்று விரும்புவார்கள்

தமிழில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் விஷ்ணு விஷால், ‘அப்படியெல்லாம் இல்லை என்று சொன்னால், அது சுத்தப்பொய்’ என்று கூறியிருக்கிறார். ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி, படத்துக்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெதுவாக வளர்ந்து வருபவர், விஷ்ணு விஷால். ‘ராட்சசன்’ படத்தின் மூலம் முன்னணி இளம் கதாநாயகர்களில் ஒருவராகி விட்டார். அந்த படத்தின் வெற்றி, விஷ்ணு விஷாலின் ‘மார்க்கெட்’ அந்தஸ்தை உயரே தூக்கிப் பிடித்தது. பெரும்பாலான இளம் கதாநாயகர்களுக்கு உள்ள ஆசை இவருக்கும் வந்து இருக்கிறது. ஒரு அடிதடி படத்தில் ...

Read More »

மிஹீகாவை திருமணம் செய்துக் கொண்டார் ராணா

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகராக இருக்கும் ராணா, தொழிலதிபர் மிஹீகா பஜாஜை இன்று திருமணம் செய்துக் கொண்டார். நடிகர் ராணா லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. இவர் தமிழில் ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். ராணாவுக்கும் ஐதராபாத்தை சேர்ந்த மிஹீகா பஜாஜ் என்ற பெண் தொழில் அதிபருக்கும் திருமணம் ஆகஸ்ட் 8-ந் தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் ஊரடங்கு ...

Read More »

அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஜோதிகா

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார். தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் ...

Read More »

ஸ்ருதி ஹாசனின் இன்னொரு பக்கம்

தமிழில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் ஸ்ருதிஹாசன், தன்னுடைய மற்றொரு பக்கத்தை எட்ஜ் மூலம் காண்பிக்க இருக்கிறார். நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் தன் பாடலை உருவாக்குவதில் செலவழித்துள்ளார். அவரது ஒரிஜினல் பாடலான ‘எட்ஜ்’ இன்று வெளியானது. அடுத்த வருட தொடக்கத்தில் வெளியாகவுள்ள அவரது ஆல்பத்தின் ஒரு அங்கம் இந்த பாடல். எட்ஜ் பாடல் எப்போதும் மறைத்து வைக்கப்பட்ட உங்கள் உணர்வுகளின் ஓரம் வரை செல்லும். வாழ்க்கையையும் காதலையும் பற்றிய கனவும், கோபமும் பயப்படவோ, சங்கடப்படவோ கூடாது என்பதே இப்பாடல். ...

Read More »

திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்த சமந்தா

பிரபல நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா, திறமையானவர்களை மீறி முன்னுக்கு வந்ததாக கூறியிருக்கிறார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தா. இவரிடம் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள், வர்த்தக படங்கள் இந்த இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கேட்டபோது அவர் அளித்த பதில் வருமாறு:- “நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்தால் பெயர் வரும். வர்த்தக படங்களில் நடித்தால் வளர்ச்சி வேறுமாதிரி இருக்கும் என்றெல்லாம் பிரித்து பார்த்து நான் கணக்கு போட்டது இல்லை. எதிர்பார்க்காமல் சினிமா துறைக்கு வந்து நடிகையானேன். ...

Read More »

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் பிரபல குழந்தை நட்சத்திரம்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் பிரபல குழந்தை நட்சத்திரம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குனர் மணிரத்னம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கி வருகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக ...

Read More »

வட இந்திய தொழில் அதிபரை காதலிக்கிறாரா ஜூலி?

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஜூலி, வட இந்திய தொழில் அதிபரை காதலிப்பதாக வந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான ஜூலிக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நடித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார்.  இந்த நிலையில் ஜூலி வட இந்திய தொழில் அதிபர் ஒருவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ளாமல் அவரோடு சேர்ந்து வாழ்ந்து வருவதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இதை பார்த்து அதிர்ச்சியான ஜூலி தனது டுவிட்டர் ...

Read More »

நகுல் – ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது

தமிழில் பல படங்களில் நடித்திருக்கும் நகுல் – ஸ்ருதி தம்பதினருக்கு குழந்தை பிறந்துள்ளது.2003-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் அறிமுகமானவர் நகுல். பின்னர் 2008-ம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படம் அவருக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது. இவர் கடந்த 2016-ம் ஆண்டு தான் காதலித்து வந்த ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்தார். தனது 35-வது பிறந்தநாளன்று தன் மனைவி கர்ப்பம் தரித்திருப்பதாக அறிவித்தார். இந்நிலையில் நகுல் – ஸ்ருதி தம்பதினருக்கு பெண் குழந்தை ...

Read More »