திரைமுரசு

நயன்தாரா பெயரில் பேய் படம் – விக்னேஷ் சிவன் கோபம்

பேய் படம் ஒன்றிற்கு நயன்தாரா கதாபாத்திரத்தின் பெயரை வைத்ததால் இயக்குனர் விக்னேஷ் சிவன் கோபம் அடைந்துள்ளாராம். அறிமுக இயக்குனர் அருள் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் காதம்பரி. கதாநாயகனாக அருள் மற்றும் கதாநாயகியாக காசிமா ரஃபி நடித்துள்ளார்கள். மேலும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா, மகாராஜன் மற்றும் முருகானந்தம் ஆகியோர்களும் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க புதுமுகங்களை கொண்டு உருவாகி இருக்கும் படம் காதம்பரி. படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: இந்த படத்தின் தலைப்பை நயன்தாரா – விக்னேஷ் சிவன் கூட்டணியில் சில ...

Read More »

நடிகைக்கு ஆத்ம திருப்திதான் முக்கியம். பணம் முக்கியம் இல்லை

தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து, அடுத்ததாக அரண்மனை 3, அருவா போன்ற படங்களில் நடிக்க உள்ளார். இதேபோல் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு: “நான்பணத்துக்கு முக்கியத்துவம் தர மாட்டேன். கதை பிடிக்காமல் போனால் அந்த படத்துக்கு பத்துகோடி ரூபாய் சம்பளம் கொடுப்பதாக சொன்னால்கூட நிச்சயமாக நடிக்க மாட்டேன். ...

Read More »

விஷ்ணு விஷால் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்

விஷ்ணு விஷால், அமலா பால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ராட்சசன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய கௌரவம் கிடைத்துள்ளது. ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. ஜிப்ரான் இசையமைத்த இந்தப் படத்தை ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. விஷ்ணு விஷால் நடித்த படங்களிலேயே அதிக வசூலைக் குவித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழை அடுத்து இந்தப் படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. ...

Read More »

பாடல்களை ஒலிக்கவிட்டு எஸ்.பி.பி.க்கு சிகிச்சை

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்க விட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. பிரபல பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எஸ்.பி.பிக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் அவருடைய உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பி.க்கு அவரது பாடல்களை ஒலிக்க விட்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. 6வது மாடியில் பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பெறும் ...

Read More »

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம்- மகன் சரண் தகவல்

பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றுமுன்தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் கூறினார்கள். பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டும் என்று சினிமா பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், ரசிகர்கள் என பலரும் பிரார்த்தனை செய்வதாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். ...

Read More »

ரசிகர்கள் எதிர்ப்பு… வெறுப்பு குறித்து எனக்கு கவலை இல்லை!

ரசிகர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், நடிகை ஆலியா பட் வெறுப்பு குறித்து எனக்கு கவலை இல்லை என்று கூறியிருக்கிறார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தியில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு எதிராக ரசிகர்கள் குரல் கொடுத்து புறக்கணித்து வருகிறார்கள். இந்த நிலையில் வாரிசு நடிகையான அலியாபட் நடித்துள்ள சடக் 2 படத்தின் டிரெய்லருக்கு, வலைத்தளத்தில் 80 லட்சத்துக்கும் மேலானோர் வெறுப்பை பதிவு செய்துள்ளனர். இந்த படத்தை அலியாபட்டின் தந்தை மகேஷ்பட் இயக்கி உள்ளார். திரைப்பட வரலாற்றில் எந்த டிரைலரும் இந்த அளவுக்கு ...

Read More »

சுதந்திரம் குறித்து ஓவியாவின் பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, சுதந்திரம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இவர் தனது சமூக வலைதளங்களில் அடிக்கடி ஒருசில கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்பது குறித்தும் போட்டியாளர்களின் மன அழுத்தத்தை பிக்பாஸ் நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் ஓவியா பதிவு செய்த டுவிட்டுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இன்று நாடு ...

Read More »

விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மாஸ்டர் படத்தில், விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடித்துள்ளாராம். விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாஸ்டர்’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இதன் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதி பவானி என்ற கதாபாத்திரத்தில் கொடூரமான வில்லனாக நடித்துள்ளார். அவர் ...

Read More »

சர்ச்சை கதையில் நடிக்க மறுத்த நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தகாத உறவை சித்தரிக்கும் சர்ச்சை கதையில் நடிக்க மறுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கிறார். அவரது படங்கள் முன்னணி கதாநாயகர்களுக்கு இணையாக வசூல் குவிக்கவும் செய்கின்றன. தெலுங்கு, மலையாளத்திலும் அவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது.  இந்த நிலையில் ஆயுஷ்மான் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்து இந்தியில் வெற்றி பெற்ற அந்தாதுன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க நயன்தாராவை அணுகியதாக தகவல் வெளியானது.  இதில் நிதின் கதாநாயகனாக ...

Read More »

ரூ.100 கோடி சம்பளம் வாங்கும் பிரபாஸ்

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் பெறுபவர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அவர் அடுத்து நடிக்க உள்ள தெலுங்கு படத்துக்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. சம்பளமாக ரூ.70 கோடியும், பிறமொழிகளில் டப்பிங் உரிமைக்கு ரூ.30 கோடியும் பெறுகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தை ...

Read More »