திரைமுரசு

வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க தயாராகும் ராதிகா!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கும் ராதிகா சரத்குமார், வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க தயாராகி வருகிறார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியினால், ‘கலையரசி’ என்று பட்டம் சூட்டப்பட்ட ராதிகா சரத்குமார், 43 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் 375 படங்களில் நடித்து இருக்கிறார். அவருடைய 375-வது படம், மணிரத்னத்தின் ‘வானம் கொட்டட்டும்.’ இதில் ராதிகா அவருடைய கணவர் சரத்குமாருடன் இணைந்து நடித்து ...

Read More »

கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி!

ஜெயலலிதாவை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் உதயநிதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய சினிமாவில் சமீபகாலமாக வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருகின்றன. சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை விட அரசியல் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு படங்களாக மாறும்போது சர்ச்சையாகின்றன. மன்மோகன் சிங், மோடி ஆகியோரின் வாழ்க்கையும் படமாக்கப்பட்டன. தமிழில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சினிமாக்களாக உருவாகி வருகிறது. இந்நிலையில் அடுத்து முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையையும் படமாக்க முயற்சிகள் நடக்கின்றன. ...

Read More »

குயின் இணையதள தொடருக்கு தடை இல்லை!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான குயின் என்ற இணையதள தொடருக்கு தடை இல்லை என்று உயர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட குயின் இணையதள தொடருக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்   ஜோசப் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போது பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இந்திய ...

Read More »

பொன்னியின் செல்வனுக்காக சென்னையில் உருவாகும் பிரம்மாண்ட அரங்கு!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்துக்காக சென்னையில் பிரம்மாண்டமாக செட் ஒன்று உருவாக உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் இறுதி வரை நடைபெறும் என தெரிகிறது. இதில் பல்வேறு நடிகர்கள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். முக்கியமான நடிகர்கள் பட்டியலை படக்குழு வெளியிட்டுள்ளது. நேற்று மாலை 5 மணி அளவில் படத்தின் லோகோவை வெளியிட்டுள்ளனர். தாய்லாந்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ...

Read More »

சினிமாவில் அதெல்லாம் சகஜம்! – ராஷி கண்ணா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கண்ணா, சினிமாவில் அதெல்லாம் சகஜம் என தெரிவித்துள்ளார். தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “ஒவ்வொரு நாளும் இன்னும் நல்ல மனிதராக மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நேற்றை விட இன்று இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்காக நம்முடன் நாமே போராட வேண்டும். இப்போது நான் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன். சினிமாவில் நடிக்க ...

Read More »

காதலை யாராலும் கணிக்க முடியாது – சுருதிஹாசன்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சுருதிஹாசன், காதலை யாராலும் கணிக்க முடியாது என கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேலை காதலித்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார். இசை கச்சேரிகளுக்காக சமீப காலமாக வெளிநாடுகளில் சுற்றி வந்த அவர் இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்க ஒப்பந்தம் ...

Read More »

நிச்சயம் தேசிய விருது வாங்குவேன்- நித்யாமேனன்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்த நித்யாமேனன், நிச்சயம் தேசிய விருது வாங்குவேன் என தெரிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் தீவிரமாக நடித்து வரும் நித்யாமேனன் அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் த அயன்லேடி படத்தில் நடிக்கவும் தயாராகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “தென் இந்திய மொழி படங்களில் நடித்து நல்ல பெயர் சம்பாதித்து விட்டேன். ‘மிஷன் மங்கள்’ மூலம் இந்தியிலும் அறிமுகம் கிடைத்துள்ளது. நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். ஆனால் தேசிய விருது ...

Read More »

தர்பாரில் அரசியல் இல்லை! – ஏ.ஆர்.முருகதாஸ்

ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படத்தில் அரசியல் இல்லை என அப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  உருவாகி இருக்கும் புதிய படம், ‘தர்பார்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். ‘லைகா’ நிறுவனம் தயாரித்துள்ளது. பொங்கல் விருந்தாக படம் திரைக்கு வர இருக்கிறது. இதுபற்றி டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னையில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- “தர்பார்’ மும்பையில் நடக்கும் போலீஸ் கதை. இதில் மும்பை போலீஸ் கமிஷனராக ரஜினிகாந்த் நடித்து இருக்கிறார். ...

Read More »

தேசிய விருதை அவருக்கு சமர்ப்பிக்கிறேன் – கீர்த்தி சுரேஷ்

மகாநடி படத்திற்காக தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ், அதனை தனது தாயார் மேனகாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என கூறியுள்ளார். மகாநடி படத்தில் மிகச் சிறப்பாக நடித்ததற்காக, தேசிய விருது பெற்றிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறுகையில், மதிப்புமிக்க விருதை பெற்ற அந்த நிமிடத்தை என்னால் மறக்க முடியாது. இந்த நிலைக்கு நான் எப்படி சென்றேன் என்பதை நினைக்க நினைக்க ஆச்சரியமாக இருக்கிறது. தற்போதைய என் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இருந்தாலும், முயற்சிக்கிறேன். இது ஒரு கனவு மட்டுமல்ல; என்னை தொடர்ந்து ...

Read More »

தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் அமிதாப் பச்சன்!

இந்திய திரையுலகில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது. தேசிய திரைப்பட விருதுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இதில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா கடந்த 23-ந் தேதி புது டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார். கடுமையான காய்ச்சல் காரணமாக அமிதாப் பச்சனால் அன்றைய தினம் பங்கேற்க ...

Read More »