திரைமுரசு

3டியில் 2.0 : சங்கரை பாராட்டிய ரஜினி

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 2.O படத்தின் 3டி மேக்கிங் காணொளி  நேற்று வெளியிடப்பட்டதையடுத்து, 3டி மேக்கிங்கிற்கு காரணமான சங்கரை ரஜினி பாராட்டியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘2.0’ பிரமாண்ட பொருட்செலவில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் உருவாக்க காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ரஜினி சிறப்பு கண்ணாடியை அணிந்து, தான் நடித்த காட்சிகளை பார்த்து ரசித்தார். இதுகுறித்து ரஜினி கூறுகையில், இயக்குனர் சங்கர் ...

Read More »

கோவாவில் இந்து முறைப்படி நடந்த சமந்தா – நாக சைதன்யா திருமணம்

நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில் இந்து முறைப்படி நடந்தது. உறவினர்கள் மட்டும் இதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். ‘பாணா காத்தாடி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், கத்தி, 10 எண்றதுக்குள்ள, தங்கமகன், தெறி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விஜய் ஜோடியாக மெர்சல் படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு பட உலகிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படம் தெலுங்கில் ‘ஏம் மாய சேஸாவே’ என்ற பெயரில் ...

Read More »

ரசிகர்களுக்கு நாளை 3டி விருந்து அளிக்கும் `2.0′ படக்குழு

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பல் உருவாகி வரும் `2.0′ படக்குழுவில் இருந்து ரசிகர்களுக்கு நாளை 3டி சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `2.0′. ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். எமி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0′ படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி ...

Read More »

நான்கு மொழிகளில் நித்யா மேனன் நடிக்கும் ப்ரண!

நித்யா மேனன் நடிப்பில் அவரது அடுத்த படமாக, விஜய்யுடன் அவர் இணைந்து நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. இந்தநிலையில் மலையாளத்தில் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் நித்யா மேனன். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உட்பட நான்கு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்திற்கு ;ப்ரண என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தை பிரபல இயக்குனர் வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். இவருடைய டைரக்சனில் ஏற்கனவே கன்னடத்தில் ஐடோன்ட்ல ஐது மற்றும் மலையாளத்தில் பாப்பின்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள நித்யா மேனன், இப்போது மூன்றாவது ...

Read More »

சக்தியாக அவதாரம் எடுத்த வரலட்சுமி

பிரியதர்ஷினி நடிப்பில் பெண்களை மையப்படுத்தி உருவாக இருக்கும் படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமார் சக்தியாக புதிய அவதாரம் எடுக்கிறார். இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி எழுதி, இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகி இருந்ததாக முன்னதாக பார்த்திருந்தோம். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படம் அதிரடி, மர்மம் கொண்ட ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு `சக்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் ...

Read More »

ரஜினி, அஜித் பெருமைக்கு அவர்களின் பணிவே காரணம்: நயன்தாரா

ரஜினி, அஜித் பெருமைக்கு அவர்களின் பணிவே காரணம், அதனால் தான் இருவரும் பெரிய ஸ்டார்களாக திகழ்கிறார்கள் என்று நடிகை நயன்தாரா கூறியிருக்கிறார். தமிழ் திரை உலகத்துக்கு வந்த உடனேயே ரஜினி, அஜித்துடன் ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. இரண்டு நாயகர்கள் மீதும் தான் வைத்திருக்கும் மரியாதையை ஒரு டி.வி. நிகழ்ச்சியில் நயன்தாரா தெரிவித்தார். அப்போது கூறிய அவர்…. ‘‘எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அஜித். அவருடன் சேர்ந்து பணியாற்றுவது மிகவும் நன்றாக இருக்கும். அவர் எப்போதும் ரியலாக நடந்து கொள்வார். ‘பில்லா’ படத்தில் நடித்த போது ...

Read More »

அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி மறைவு

அமெரிக்காவின் பிரபல ராக் பாடகரான டாம் பெட்டி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 66. அமெரிக்காவின் பிரபல ராக் பாடகர் டாம் பெட்டி. பாடகர், பாடலாசிரியர், பல வாத்திய இசைக்கலைஞர் என பன்முகத்திறமை கொண்ட டாம் பெட்டி, ஹார்ட்பிரேக்கர்ஸ் இசைக்குழுவிற்கு தலைமை தாங்கி பல்வேறு பாடல்களை வழங்கி உள்ளார். தனியாகவும் இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். அவருடைய இசை, ராக் அண்ட் ரோல், ஹார்ட்லேண்ட் ராக், ஸ்டோனர் ராக் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவரது இசை இளம் தலைமுறையினரிடையே மிகவும் பிரபலம். அவரது பாடல் பதிவுகள் ...

Read More »

ரஜினி படத்தலைப்பில் நடிக்கும் பிரசாந்த்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் பிரசாந்த் அடுத்ததாக ரஜினியின் படத்தலைப்பில் த்ரில்லர் படம் ஒன்றில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த். 2011-க்குப் பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த பிரசாந்த், நடிப்பில் `புலன் விசாரணை’ என்ற படம் கடந்த 2015-ஆம் ஆண்டில் வெளியாகியது. அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் `சாகசம்’ என்ற படமும் வெளியானது. இந்நிலையில், பிரசாந்த் அடுத்ததாக பாலிவுட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `ஜானி காடர்’ படத்தின் ...

Read More »

கௌதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் கார்த்திக்!

கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மஹாதேவகி’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தில் அவரது தந்தையும், நடிகருமான கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றனர். ‘இவன் தந்திரன்’ படத்திற்கு பிறகு கிரிடேட்டிவ் என்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ‘நான் சிகப்பு மனிதன்’ பட இயக்குனர் திரு இயக்கவிருக்கும் அந்த படத்தில் ‘நவரச நாயகன்’ கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ...

Read More »

உலக சாதனை படைத்த மனித நேயத்தை போற்றும் குறும்படம்!

சமீபத்தில் பேஸ்புக்கில் “மிஸ்டர் காப்ளர்” என்ற குறும்படம் வெளியிடப்பட்டது. இந்த குறும்படத்தை சதீஷ் குருவப்பன் என்பவர் நடித்து, இயக்கி, தயாரித்துள்ளார். மனித நேயத்தை போற்றுவோம். அனைவருக்கும் மரியாதை கொடுப்போம் என்ற உயர்ந்த கருத்தை வலியுறுத்தி இந்த குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது. 1.30 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த குறும்படத்திற்கு உலகளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை இந்த குறும்படத்தை 10 கோடிக்கும் மேற்பட்டோர் பார்த்திருப்பதுடன், 27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். இது உலக சாதனையாக கருதப்படுகிறது. இதை இந்த குறும்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சதீஷ் தெரிவித்திருக்கிறார். ...

Read More »