குமரன்

இளையராஜாவுக்கு சீனு ராமசாமி எழுதிய வாழ்த்துப்பா

இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இயக்குனர் சீனுராமசாமி வாழ்த்து கூறியுள்ளார். இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு இயக்குனர் சீனுராமசாமி வாழ்த்து கூறியுள்ளார். இளையராஜா, சீனு ராமசாமி, Ilayaraja, Seenu Ramasamy இசைஞானி இளையராஜா இன்று தமது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இயக்குனர் சீனு ராமசாமி வாழ்த்துப்பா ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இசைக்கு ஒரு வாழ்த்துப்பா… ……………………………………….. எழுபதுகளில் தொடங்கிய எங்கள் பண்ணைபுரத்துப் ...

Read More »

மசூதிக்குள் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்- 2 பேர் பலி

காபூலில் உள்ள மசூதிக்குள் நடந்த தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பசுமை மண்டலத்தில் ஒரு பிரபலமான மசூதிக்குள் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர் என  உள்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தாரிக் அரியன் கூறியதாவது:- செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி (1500 ஜிஎம்டி) இரவு 7:25 மணியளவில் வஜீர் அக்பர் கான் மசூதியை குறிவைத்து ...

Read More »

கொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சாத்தியமா?

 கொரோனாவுக்கு பின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு எப்படி நடக்கும் என்பது குறித்து இயக்குனர் மணிரத்னம் சம்பாத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரங்கினால் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தடைபட்டு உள்ளது. படத்தில் நூற்றுக்கணக்கான துணை நடிகர்கள் பங்கேற்கும் போர்க்கள காட்சிகளை ஊரடங்கு முடிந்த பிறகு எப்படி படமாக்க போகிறாரோ என்று கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. இந்த நிலையில் இணைய தள கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று பேசும்போது மணிரத்னம் கூறியதாவது: “டிஜிட்டல் தளம் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனாலும் தியேட்டர்களில் படம் பார்க்கும் அனுபவம் அலாதியானது. ...

Read More »

ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணம்: அமெரிக்காவை அதிரவைக்கும் போராட்டங்கள்!

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் காவல் மரணத்தை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. செயிண்ட் லூயிஸ் நகரில் நான்கு காவல் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என அந்நகர காவல் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனினும் உயிராபத்தை உண்டாக்கும் காயங்கள் அவர்களுக்கு உண்டாகவில்லை. கலிஃபோர்னியா கடலோரப் பகுதிகளில் இருக்கும் சான் பிராசிஸ்கோ, சான் ஜோஸ், சாண்டா கிளாரா, ஓக்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடக்கின்றன. அப்பகுதிகளில் ...

Read More »

கொரோனா நியூசிலாந்தின் அனுபவம்

நியூசிலாந்து கொரோனாத் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றது. தெளிவு, வேகம், வெளிப்படைத்தன்மை போன்றவைகளை உள்ளடக்கிய தேசபரிபாலனத்தின் அணுகுமுறையே அதற்கு முக்கிய காரணமாகும். ஐந்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தேசத்தில் லொக்டவுன் கட்டுப்பாடு ஏழுவாரம் நீடித்தது. அஃது உலகிலேயே கடுமையான லொக்டவுன் எனச் சொல்லப்படுகின்றது. கொரோனாத் தொற்றை எதிர்கொள்வதில் தேசபரிபாலனத்தின் மாண்புகளை நியூசிலாந்து வெளிப்படுத்தியிருக்கின்றது. தெளிவான அரசியல் தலைமை, உறுதியான நிர்வாகக் கட்டமைப்பு, சமத்துவமான சுகாதாரச்சேவை, துறைசார்வல்லுனர் குழாம் ஆகியவற்றின் ஒன்றிணைந்த செயற்படு பாங்கு, அதனை மெருகேற்றியிருக்கின்றது. “சரியானதைச் செய்யவேண்டும். அஃது அறம் வழிப்பட்டதாக இருக்கவேண்டும்” ...

Read More »

ஒடுக்கப்பட்ட இனத்தவருக்கு கூகுள் எப்போதும் துணை நிற்கும் – சுந்தர் பிச்சை

இன சமத்துவத்திற்கு ஆதரவாக எப்போதும் நின்றிடும் என கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மின்னசோட்டா தலைநகரான மின்னபோலிஸ் நகரில் கள்ளநோட்டு தொடர்பான விசாரணை ஒன்றின்போது, கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் எனும் நபர் காவல் துறையின்  பிடியில் உயிரிழந்தார். இந்த இறப்பிற்கு நீதி வேண்டி அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்த நான்கு நாட்களாக, நாடு முழுவதும் பரவியுள்ள இந்த போராட்டத்தால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. பல இடங்களில் கலவரம் வெடித்ததைத் ...

Read More »

சந்திரமுகி 2 குறித்து சிம்ரன் அதிரடி டுவிட்

சந்திரமுகி 2-ம் பாகத்தில் சிம்ரன் நடிக்க உள்ளதாக செய்திகள் பரவி வரும் நிலையில், அவர் அதுகுறித்து டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார். பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். முதல் பாகத்தில் சந்திரமுகியாக நடித்த ஜோதிகா இரண்டாம் பாகத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை சமீபத்திய பேட்டி மூலம் உறுதிப்படுத்தினார். மேலும் சந்திரமுகி கதாபாத்திரத்துக்கு சிம்ரன் பொருத்தமாக ...

Read More »

எமது அரசியல் அபிலாசைகளைக் கைவிடுவது அர்த்தமற்றது!

உலகமே எதிர்பார்த்திராத தருணத்தில் கொவிட்-19 எனப்படுகின்ற ஒருவகை கொரோனோ வைரஸ் தனது தாக்குதலை ஆரம்பித்து அனைத்துலகையுமே நிலைகுலைய வைத்திருக்கிறது என தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ் மக்கள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இதன் நேரடியான மற்றும் மறைமுகமான தாக்கங்கள் குறைந்தபட்சம் இன்னும் 3-4 ஆண்டுகள் வரையாவது தொடருவதற்கான தெளிவான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன. இந்தச் சூழ்நிலையில் எமது சுகாதார, பொருளாதார, கல்வி, அரசியல், சமூக ஸ்திரத்தன்மையை தக்கவைத்து பாதுகாத்து மேம்படுத்துவதற்கான திட்டமிடல்களும்  தயார்படுத்தல்களும் உத்வேகம் பெறவேண்டிய ஒரு தேவை ...

Read More »

வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை ! -கொழும்பிலுள்ள சீன தூதுரகம்

இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது. வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அதனை ...

Read More »

ஆறுமுகனின் திடீர் மறைவு – ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழு …….!

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள கட்சித் தலைமை வெற்றிடத்தை உரிய முறையில் நிரப்பும் வரையில், கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஐவரடங்கிய இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக, கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். இந்த இடைக்கால நிர்வாகக் குழுவில், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் போசகரும் முன்னாள் தலைவருமான முத்து சிவலிங்கம், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உப தலைவர் எஸ்.சிவராஜா, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிர்வாக செயற்பாட்டுக்கான உப தலைவர் எம்.மாரிமுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ...

Read More »