அவுஸ்ரேலியாவில் பொது சுகாதாரத் துறையில் ஏமாற்று நடைமுறைகள்!

விக்டோரியா மாநிலத்தின் பொது சுகாதார துறையில் கடுமையான அபாயங்களை விக்டோரியாவின் ஊழல் கண்காணிப்பு அமைப்பு இனங்கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் குறிப்பிடத்தக்க மற்றும் உறுதியான கொடுமைப்படுத்துதல் மற்றும் தொல்லை (bullying and harassment) ஆகியனவும் சுகாதார துறையில் இனங்காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விக்டோரிய பொது சுகாதாரத் துறையில் ஏமாற்று நடைமுறைகள், மருந்து திருட்டு, மோசடி மறைப்புக்கள் மற்றும் மோசடியான பண வசூல், அதாவது fraudulent billing ஆகியவை நிலவுவதாக மாநிலத்தின் ஊழல் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

உடல்நல சேவைகளில் இருந்து கட்டுப்பாட்டு மருந்துகள், தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அல்லது நிதியியல் ஆதாயத்திற்காக விற்பனை செய்யப்படுதல், மற்றும் குறிப்பிடத்தக்க ஊழல் ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளது

இந்த தகவலினை The Independent Broad-based Anti-corruption Commission தெரிவித்துள்ளது.