கிரிக்கெட் போட்டி: நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் தொடக்கம்

இந்தியா-அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் வருகிற 17-ந்தேதி நடக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் தொடங்குகிறது.

-அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது. இந்தியா–அவுஸ்ரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகிற 17-ந்திகதி நடக்கிறது.

இதற்கான நுழைவுச் சீட்டு விற்பனை நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அன்றைய தினம், சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கவுண்ட்டர்களில் டிக்கெட்டுகளை வாங்கிக்கொள்ளலாம். டிக்கெட்டின் குறைந்த பட்ச விலை ரூ.1,200. மேலும் ரூ.2,400, ரூ.4,800, மற்றும் சொகுசு வசதி கொண்ட ரூ.8 ஆயிரம், ரூ.12 ஆயிரம் ஆகிய விலைகளிலும் டிக்கெட்டுகள் விற்கப்படும்.

அதே நாளில் www.bookmyshow.com இணையதளத்திலும் டிக்கெட்டுகளை வாங்கலாம்.