எனது அமைச்சு பதவியினை ராஜினாமா செய்யப்போவதில்லை! – டெனிஸ்வரன்

நான் சுயமாக முன்வந்து எனது அமைச்சு பதவியினை ராஜினாமா செய்யப்போவதில்லையென வட மாகாண போக்குவரத்து, மீன்பிடி அமைச்சர் ப. டெனிஸ்வரன் அறிவித்துள்ளார்.

தேவையாயின் முதலமைச்சரோ எனது கட்சியோ அதனை செய்யட்டுமென தெரிவித்துள்ள அவர் தான் சுயமாக பதவிவிலகப் போவதில்லை என சவால் விடுத்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை மன்னாரில் இடம்பெற்ற் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். பா.டெனிஸ்வரன் தான் வகித்துவரும் அமைச்சு பதவியினை விட்டு விலக வேண்டுமென கூறிவரும் ரெலோவின் உயர்மட்டக்குழு கடந்த 12ம் திகதி வவுனியாவில் கூடி அவர் தனது முடிவை அறிப்பதற்கு ஒருநாள் கால அவகாசத்தையும் வழங்கியிருந்தது.

அதற்குள் பதவிவிலகாத பட்சத்தில் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென கட்சி தலைமை எச்சரித்திருந்தது.இந்நிலையில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்த அமைச்சர் பா.டெனீஸ்வரன் தான் பதவி விலக முடியாது என உறுதியாக கூறியுள்ளார்.