நல்லூர் துப்பாக்கிச்சூட்டு சம்பவ நபருக்கு கொடுத்த உணவுப் பொதியில் ரெஸ்­ரர்!

நல்­லூ­ரில் நடந்த துப்­பாக்­கிச் சூட்­டின் முதன்­மைச் சந்­தேக நபர் என்று பொலி­ஸா­ரால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட சிவ­ராசா ஜெயந்­த­னுக்­குக் கொடுப்­ப­தற்­காக அவ­ரது மனைவி கொண்டு வந்த உணவுப்பொதியில் இருந்து மின்­சா­ரக் கடத்­த­லைப் பரி­சோ­திப்­ப­தற்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் ’ரெஸ்­ரர்’, சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளால் மீட்­கப்­பட்டுள்­ளது. இத­னை­ய­டுத்து ஜெயந்­த­னின் மனைவி சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளால் எச்­ச­ரிக்­கப்­பட்­டார்.

நல்­லூர் கோயில் பின் வீதி­யில் கடந்த சனிக்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம் மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யனை இலக்கு வைத்து நடத்­தப்­பட்ட துப்­பாக்­கிச் சூட்­டுச் சம்­ப­வத்­தில், அவ­ரது மெய்ப்­பா­து­கா­வ­லர் உயி­ரி­ழந்­தி­ருந்­தார். இந்­தச்சம்­ப­வத்­து­டன் தொடர்­பு­டைய முதன்­மைச் சந்­தேகநபர் பொலி­ஸா­ரால் தேடப்­பட்டு வந்த நிலை­யில் கடந்தசெவ்­வாய்க்­கி­ழமை யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­தில் சர­ண­டைந்­தி­ருந்­தார். நீதி­வான் முன்­னி­லை­யில்
முற்­ப­டுத்­தப்­பட்டு எதிர்­வ­ரும் 8ஆம் திகதி வரை­யில் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டுள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லை­யில் தனிச் சிறை­யில் அவர் அடைக்­கப்­பட்­டுள்­ளார். இவ­ரைப் பார்ப்­ப­தற்கு இவ­ரது மனைவி கடந்த வியா­ழக்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­லைக்­குச் சென்­றுள்­ளார்.

அவர் கொண்டுசென்ற பொதி­க­ளைச் சிறைக்­கா­வ­லர்­கள் சோத­னை­யிட்­டுள்­ள­னர். உடுப்­பு­க­ளுக்­குள்­ளி­ருந்து ‘ரெஸ்­ரர்’ (மின்­சா­ரக் கடத்­த­லைப் பரி­சோ­திக்­கும் கருவி) மீட்­கப்­பட்­டுள் ளது. சந்­தேக நப­ரின் மனை­வி­யைச் சிறைக்­கா­வ­லர்­கள் கடு­மை­யாக எச்­ச­ரித்­துள்­ள­னர். அத்­து­டன் சிறைக்கு வந்து அவ­ரது கண­வ­ரைப் பார்­வை­யி­டு­வ­தற்குத் தடை விதிக்­கப்­பட்­டு உள்­ள­தாகச் சிறைச்­சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.