லலித் ஜெயசிங்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ்ப்பாணம்,புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட,சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவை மீண்டும்  8 ஆம் திகதி வரை  விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் இன்று (25)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.